Sunday, August 14, 2011

வாரும் நபியே நீர் வாரும் நபியே.....

  



 வாரும் நபியே நீர் வாரும் நபியே – எம்
வள்ளல் இரசூல் நபியே நூருன் நபியே
ஆளும் நபியே எமை ஆளும் நபியே – அகம்
ஆனந்தமே அள்ளித் தரவாரும் நபியே
வழிமீது விழிவைத்து வரும் வேளை நோக்குகிறோம்
வாரும் நபியே முகம்பாரும் நபியே – எங்கள்
வாஞ்சை மன ஏக்கமதை தீரும் நபியே


அவ்வலும் நீரே ஆகிரும் நீரே
ஆதியில் நூராய் வந்த ஜோதி நபியே
அகமதும் நீரே முகமதும் நீரே
அல்லாஹ்வின் தூதாய் வந்த நீதி நபியே – எங்கள்
இன்பதுன்பம் அனைத்திலும் எங்கள் துணையே – உங்கள்
அன்பு நெஞ்சம் பாவி தஞ்சம் புகும் மனையே – நீர்
இல்லாமல் வாழ்வில்லை உண்மையே - இதை
சொல்லாமல் வாழ்ந்தென்ன நன்மையே
உடலோடு உடலாக உயிரோடு உயிராக
வாழும் நபியே எம்மில் வாழும் நபியே – உம்
வாஞ்சை முகம் காண வேண்டும் வாரும் நபியே
வாரும் நபியே நீர்வாரும் நபியே – வந்த
வாசல் ஸ்தலம் வாசம் வீசும் வேந்தர் நபியே

கோடான கோடி கல்புகள் நாடி
கோவென்று போற்றிக் கொண்டாடும் நபியே
பாமாலை சூடி பொழுதெல்லாம் கூடி
பாசத்தை கொட்ட மனம் நாடும் நபியே – உயர்
மஞ்சத்திலே வீற்றிருக்கும் மன்னர் நபியே – எம்
நெஞ்சத்திலும் வீற்றிருக்க வாரும் நபியே – உமை
காணாமல் ஒளி இல்லை கண்ணிலே – மொழி
கேளாமல் சுகமில்லை நெஞ்சிலே
பேரின்ப காதல் மனம் பாவி எங்கள் நெஞ்சுக்குள்ளே
வீச நபியே நீர் வாரும் நபியே – வரும்
பாதைமலர் தூவுகின்றோம் வாரும் நபியே
வாரும் நபியே நீர் வாரும் நபியே – வந்த
வாச ஸ்தலம் வாசம் வீசும் வேந்தர் நபியே

கஸ்தூரி வாசம் வீசும் மெய் தேகம்
கருமேகம் குடை இடும் காமில் நபியே
மெய்யவன் நேசம் வாரியே வீசும்
மிஃராஜு ராஜர் எங்கள் மேன்மை நபியே – வழி
தோரணங்கள் கட்டிவைப்போம் வாரும் நபியே – சுப
சோபனங்கள் பாடிநிற்போம் வாரும் நபியே – உமை
கொண்டாடும் உள்ளங்கள் தவிக்குது – தினம்
மன்றாடி கண்ணீரில் மிதக்குது
மதீனாவின் திசைநோக்கி ஸலவாத்தை இசையாக்கி
பாடிநிற்கின்றோம் முகம் தேடி நிற்கின்றோம் - எங்கள்
மன்னர் உங்கள் வரவையே நாடி நிற்கின்றோம்
வாரும் நபியே நீர் வாரும் நபியே – வந்த
வாச ஸ்தலம் வாசம் வீசும் வேந்தர் நபியே

லட்சிய கீதம் லட்சத்தில் ஓதும்
முத்திரையிடப்பட்ட சொர்க்க நபியே
உச்சத்தின் உச்சம் உம்மத்தின் நேசம்
உள்ளத்தில் கொண்ட உயர்வர்க்க நபியே
உடல் நாளம் போடும் தாளம் உங்கள் காதல் இசையே
எங்கள் காலம் ஓடும் காதல் நபி காலடியிலே
இந்த இகவாழ்வில் எமை காக்கும் நாயகம்
நீர் மறுவாழ்வில் கரைசேர்க்கும் தாயகம்
கலிமாவின் பொருள் சொல்ல வலிமார்கள் வழிவந்து
வாழும் நபியே எமை காரும் நபியே
உங்கள் காதல் மொழி காதில் விழ வாரும் நபியே
வாரும் நபியே நீர் வாரும் நபியே – வந்த
வாச ஸ்தலம் வாசம் வீசும் வேந்தர் நபியே

மக்கத்தில் நீரும் துயர் கண்ட நேரம்
பக்கத்தில் இல்லை நாங்கள் பண்பு நபியே
மதீனத்து வீதி மகிழ்ந்தாடும் நேரம்
மகிழ்ந்தாட இல்லை நாங்கள் மாண்பு நபியே – தாங்கள்
தாயிஃபிலே பட்ட துயர் கொஞ்ச நஞ்சமா – உயர்
தாயின் மனம் கொண்ட உம்மில் அருள் பஞ்சமா – நீர்
தரவேண்டும் திருக்காட்சி கண்ணிலே – உடன்
வரவேண்டும் அடிமைகள் முன்னிலே
குருநாதர் உருவாக திருஞானம் தருவோரே
வாரும் நபியே துயர் தீரும் நபியே – கவி
பாடும் எமின் ஏக்கம் தீர வாரும் நபியே
வாரும் நபியே நீர் வாரும் நபியே – வந்த
வாச ஸ்தலம் வாசம் வீசும் வேந்தர் நபியே


(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.
(அல்-குர்ஆன் 21: 107)


அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.
(அல்-குர்ஆன் 33:21)


(நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.
(அல்-குர்ஆன் 68:4)


"புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?" என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, "அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்" என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’" என்றார்கள். "நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விடும் போது அவரது கப்ரில் வணங்குமிடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். இவர்களின் வடிவங்களையும் அதில் அமைத்து விடுகின்றனர். கியாமத் நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்கள்தான் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்கள்."

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி மற்றும் முஸ்லிம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
 
ஒரு முஸ்லிமுக்கும், இணைவைத்தலுக்கும், இறை நிராகரிப்புக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவது தான்.

ஆதாரம்: முஸ்லிம்
"புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?" என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, "அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்" என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’" என்றார்கள். "நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்

1 comment:

வாஞ்சையுடன் வாஞ்சூர் said...

ASSALAMU ALAIKKUM W.R.B.

RAMADHAN MUBARUK

செவிவழியாக தாலாட்டும் பாடலை தென்றலாக்கி

திரையில் "ஸ்லைடு ஷோ" மூலமாக‌ முத்தான கருத்துக்களும், தகவல்களுமே பதித்து

பார்வையின் வாயிலாக
சிந்தை முழுவதையும் வசப்படுத்தி மெய் மறக்கச்செய்த

மதிப்பிற்குரிய நீடூர் முஹம்மதலி ஜின்னா அவர்களை பாராட்டுவோம்.

வாஞ்சையுடன் வாஞ்சூர்.