Saturday, August 21, 2010

அநியாயம், அக்கிரமம், இதைக்கேட்பாரில்லையா?

அநியாயம், அக்கிரமம், இதைக்கேட்பாரில்லையா?

டிஸ்கி: இந்தப்பதிவு பெண்களுக்கு எதிராகப் போடப்பட்ட ஆணாதுக்கப்பதிவு இல்லை என்று சொல்லிக்கொள்கிறேன்.



திரட்டிகளில் பதிவுகளை மேய்வது என்னுடைய ஒரு பொழுது போக்கு. கடந்த சில நாட்களாக நான் பார்த்தது என்னவென்றால் எந்தப்பெண் பதிவரின் தளத்துக்கு சென்றாலும் அவர்கள் எழுதுவது கத்தரிக்காய் சாம்பார் வைப்பது எப்படி? வெண்டைக்காய் பொரியல் செய்வது எப்படி? இப்படியே போய்க் கொண்டிருக்கிறது.

ஆகவே பெண்கள் சமையல் குறிப்புகள் எழுதுவதற்குத்தான் லாயக்கு என்று அவர்களே முடிவு எடுத்துவிட்டார்கள். இதில் ஆண்கள் சொல்வதற்கோ, செய்வதற்கோ என்ன இருக்கிறது. ஏதாவது சொல்லப்போனால் ஆணாதிக்கவாதிகள் என்ற பட்டம் சூட்டுவார்கள்.

அடுத்தது. ஏதோ பெண்களுக்கு மட்டும்தான் சமையற்கலையை ஒட்டுமொத்த குத்தகைக்கு விட்டமாதிரி தெரிகிறது. இது மிகவும் தவறான எண்ணம். ஆண்களுக்கும் சமைக்கத் (பெண்களைவிட நன்றாக) தெரியும். பதிவர் ஜெய்லானி போட்ட சமையல் குறிப்பை எல்லோரும் பார்த்திருப்பீர்கள். அதைத் தொடர்ந்து நானும் சமையல் குறிப்புப் போடலாம் என்று இருக்கிறேன். (பின்னூட்டங்களைப் பார்த்துவிட்டு ஒரு முடிவு எடுக்கிறேன்).
http://swamysmusings.blogspot.com/2010/08/blog-post_22.html

1 comment:

Unknown said...

பெண்ணாகிய என் பதிவில் சமையல் குறிப்புகள் எழுதியதே இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்: 5 வருஷமா "வலைய" வரேன். எனக்கு நல்லாவே சமைக்கத் தெரியும். எனக்கு என்ன எழுதணும்னு தோணுதோ அதைத் தான் எழுதுவேன்.

என்னைய மாதிரி இன்னும் பல பெண்பதிவர்கள் இருக்காப்ல. பாத்துக்கங்க!

அப்புறம், ஏன் இந்த சினிமா தொடர்பா எழுதறவங்க எல்லாம் ஆண் பதிவர்களா இருக்காப்ல?