Thursday, August 23, 2018

நரை முடி

நரை முடியை பற்றி
நிறைய பேர் கவலைப் படுகிறார்கள்.
அதை மறைக்க ரொம்பவே மெனக்கெடுகிறார்கள்.
ஆனால் ...
#நரை_என்பது_வரம்
என்பதை அறியாதவர்களாக இருக்கிறார்கள்.

உலகில் முதன் முதலில்
நரை முடி தோன்றியது
#இப்ராஹீம்_நபிக்குத்தான்.
ஒருநாள் தன்னுடைய நீண்ட தாடியை
விரல்களால் கோதி விட்டபடி ஆழ்ந்த சிந்தனையிலிருந்தார் இப்ராஹீம் நபி.

அப்போது தன்னுடைய தாடியில் ஒரு வெள்ளை முடி இருப்பதைப் பார்த்து
பயந்து பதறி விட்டார்.
" இறைவா ... என் தாடியில் வெள்ளையாக ஒரு முடி இருக்கிறதே ...
என்ன இது ? " என்று இறைவனிடம் கேட்டார்.
" இது நான் உமக்கு வழங்கிய கண்ணியம் " என்றான் இறைவன்.
உடனே ...
" இறைவா என் கண்ணியத்தை அதிகப்படுத்து " என்று பிரார்தித்தார்
இப்ராஹீம் நபி.
தாடி முழுவதும் வெள்ளையாகி விட்டது.

*நாங்கல்லாம்
இப்ராஹீம் நபி பரம்பரை

Abu Haashima

No comments: