Saturday, June 16, 2018

ஏகனை எண்ணி

ஏகனை எண்ணி
இரவுபகல் சிந்தித்துத்
தாகம் மறந்திட்ட
தீன்குல --- 
யோகியர்க்கு
சாத்வீக நோன்பிருந்த
சாந்திமார்க்க நல்லோர்க்கு
ஈத்முபாரக் சொல்கின்றேன்
இன்று.

*******


ஒவ்வோர் பருக்கையிலும்
அவ்வவர் பேரெழுதும்
திவ்விய நாயகனைத்
தேர்ந்துறையும் --- செவ்விய
மார்க்கத்தார் வாழ்வு 
மலர்ந்திடத் தீன்தமிழில்
வார்த்தேன் ரமலான்நாள் வாழ்த்து.

*******

பருகாமல் அன்னம்
அருந்தாமல் உள்ளம்
பெருக்கிக் ---- கருத்தனை
எண்ணித் தொழுதோர்க்கு
ஈகைத் திருநாளில்
இன்பமுற
வாழ்த்துரைத்தேன் இங்கு.

*******

பசித்தும் விழித்தும்
படைத்தவனை நோன்பால் 
புசித்தும் பிறர்க்கென
நெஞ்சம் -- கசிந்திடும்என்
ஊன்கலந்த நேயர்க்கு
ஈகைநாள் வாழ்த்தினை
நான்கலந்து சொன்னேன் நன்கு.

-- முரளிஅரூபன்

********

No comments: