Monday, August 21, 2017

உங்களின் எந்தக்கவிதை உங்களை அடையாளப்படுத்தியது?

உங்களின் எந்தக்கவிதை உங்களை அடையாளப்படுத்தியது?

உயிர் எழுத்து இதழில் வெளிவந்த முத்தங்களின் இரகசியங்கள்” என்ற கவிதை என்னை கவனப்படுத்தியது என்று நினைக்கிறேன் .
- சக்திஜோதி

“என்னை முத்தமிடுகையில்
உனது பிரச்சினை
என்னவென்பது
எப்பொழுதும் புரியவில்லை



உனக்கான
முத்தத்தில்
புதைந்திருக்கும் பிரியங்களின்
இரகசியங்கள்
நீ அறிந்து கொள்ள
முயல்வதேயில்லை

என் இதழ்கள்
உன்னைத் தீண்டுகையில்
என் தந்தை
என் சகோதரன்
என் நண்பன் ஆகியோரின்
அன்பையும்
உன்னிடமே சேர்க்கிறேன்

இதழ்களால்
என் மீது செலுத்தும்
உனதன்பு
வெறும் முயங்குதலில்
முடிந்து போகின்றபொழுது
எஞ்சுகின்ற தனிமையில்
புரிந்து கொள்வதற்கு
என்னிடம்
எதுவும் இல்லை எப்பொழுதும்.”

தீர்க்கமான் பேச்சு, சிறந்த தமிழாற்றல், நட்பினை மதிக்கும் சீரிய குணம், எப்பொழுதும் முகமலர்ச்சி, வந்தாரை வரவேற்கும் பாங்கு, சீர்மிகு விருந்தோம்பல் இத்தனை குணங்களையும் ஒருங்கே பெற்ற கவித்தென்றல் திருமதி. சக்திஜோதி அவர்களின் சந்திப்பின் நீண்ட உரையாடலில் …

மேலும் முழுமையாக படிக்க இங்கு கிளிக் (சொடுக்கவும் )

 by தமிழ்நெஞ்சம் அமின்

No comments: