Tuesday, August 22, 2017

வாழ்க்கை ஒளிமயமாக அமைய ,,,

உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள்
எல்லாவற்றையும்
குறித்து வைத்துக்
கொள்ளுங்கள்.
பழிவாங்கிட அல்ல,
தப்பித்தவறி கூட அதே
தவறை இன்னொருவருக்கு
செய்து விடக்கூடாது என்பதற்காக...
யாரையும் பரிகாசமாக பார்க்காதீர்கள்.
அவர்களிடம் கற்றுக்
கொள்ள வேண்டிய
விஷயம் ஏதாவது
ஒன்று கண்டிப்பாக
இருக்கும்.

பிறர் குறைகளை மட்டும்
பேசிக் கொண்டிருக்காதீர்கள்..
நிறைகளையும் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்..
தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று எடுத்தெறிஞ்சு பேசாதீர்கள்..பிறருக்கு கொஞ்சமாவது தெரியும்
என்று நினைக்கவும் மறந்து விடாதீர்கள்..
நமக்கு பிடிக்காதவராகவே
இருந்தாலும் அவரின்
சிறு வெற்றிக்கு
மனதார ஒரு வாழ்த்து
சொல்லிவிட்டு செல்லுங்கள்.
அடுத்தவரை திட்டுவதையும்,
சபிப்பதையும் வழக்கமாக்கிக் கொள்ளாதீர்கள்..வாழ்த்துக்
களையும்,புன்னகைகளையும் வீசி செல்லுங்கள்..
'என்ன வாழ்க்கைடா இது'
என்று நினைப்பதை விட,
'இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை' என்று எண்ணி
வாழுங்கள்..
மற்றவர்கள் என்ன
நினைப்பார்கள் என்ற
எண்ணத்தை விட அவர்கள்
அளவுக்கு நாம் ஒன்றும்
தாழ்ந்து விடவில்லை என்று தன்னம்பிக்கையோடு இருங்கள்..
நீங்கள் நேசிப்பவர்கள்
பிரிந்து சென்றால்
சபிக்காதீர்கள். அவர்கள்
நல்லபடியாக வாழ
பிரார்த்தனை செய்யுங்கள். உண்மையான அன்பு
என்பது அதுதான்..
சிறிய வாய்ப்புகள் என்றாலும் அவற்றை சிறப்பாகச் செய்து முடியுங்கள்.. பெரிய
வாய்ப்புகள் உங்களை
தேடி வரும்..
பிறரை தவிர்க்கும் முன் ஒரு நிமிடம் சிந்தியுங்கள்..
உங்களை பிறர் தவிர்த்தால் தாங்கிக் கொள்ள முடியுமா என்று..
உண்மையான
அன்பில் சந்தேகம் கொள்ளாதீர்கள்..உங்கள் அன்பும் பிறரால் சந்தேகிக்கப்படும்..
எதிரே வருபவரின் தகுதியை பாராமல் ஒரு சிறு புன்னகை
உதிர்த்தபடி கடந்து செல்லுங்கள்..உங்கள் தகுதி ஒன்றும் குறைந்து விடப் போவதில்லை..
உங்களைப் பிடிக்காமல் ஒருவர் விலகிச் செல்கிறார் என்றால் அமைதியாக நீங்களும் ஒதுங்கி விடுங்கள்..
#இதுவே நம் வாழ்க்கை
ஒளிமயமாக அமைய
சிறந்த வழி..
Saif Saif
.

No comments: