Sunday, August 20, 2017

உன்னைப் புகழ்வதற்கு வார்த்தைகளைத் தேடுகிறேன்..

என் 
கலையார்வத்தை
கொண்டாடித் தீர்க்கும்
உன்னைப் புகழ்வதற்கு
வார்த்தைகளைத் தேடுகிறேன்..
என்
எழுத்துக்களின் 
ஒவ்வொரு வரிகளையும்
ஆராய்ந்து நீ என்னிடமே
விளக்கும்போது நான்
மெய்மறந்தே போகிறேன்..
என்னுயிரே
இப்படித்தான் 
உன்னைப்பற்றி
எழுத நினைக்கிறேன்..

என்ன செய்ய..
என்னைப் பற்றியான
எதிர்மறை விசயங்களை,
விமர்சனங்களை
உன்னிடமிருந்து தான்
முதலில் கேட்கிறேன்..
இதுவும் கடந்து போகும்
என்ற ஒற்றை நம்பிக்கைதான்
நமக்கிடையேயான
உறவையும்.. நெருக்கத்தையும்
தந்துகொண்டு இருக்கிறது
என்னுயிர் மனைவியே!!!


No comments: