Saturday, March 29, 2014

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் யாசர் அரஃபாத்

யாசர் அரஃபாத் அவர்கள்  இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.
முகநூலில் (ஃ பேஸ்புக்கில்) யாசர் அரஃபாத் அவர்களின் பக்கம்
  என் பக்கம்
 Yasar Arafat
உங்களில்  உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை  மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை  செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இந்த வழியில் கவிஞர் யாசர் அரஃபாத் அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.

அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)

'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்

நம்மைப்பற்றி நாம் அறிவோம்
நம்மை வாழ்வித்தவர்களை
நமக்கு கல்வி  கொடுப்பவகளை
நம் உறவுகளை
நம் நண்பர்களை
நன்கு அறிந்து கொள்வதில்
நமக்கு மிகவும் மகிழ்வும் ,பலனும் .பலமும் ,உந்துதல் சக்தியும் கிடைக்கும்

யாசர் அரஃபாத் அவர்கள் ஒரு சிறந்த ,அருமையான எழுத்தாளர்,நல்ல மனம் கொண்டு சேவை நோக்கம் கொண்டதுடன் மார்க்க பிடிப்பு கொண்டு மார்க்கத்தை முறையாக பேணி வருபவர் .
அவரது கவிதைகள் ,கட்டுரைகள் அனைத்தும் பாராட்டுகள் பெற்றவை .அவைகள் பலவற்றை நமது வலைப் பூவிலும், வலைதளத்திலும் வெளியிட்டு மகிழ்ந்துள்ளோம்
அவரது ஆக்கங்களை முகநூலில் அவரது பக்கத்தில்Yasar Arafat பார்க்கலாம் .

யாசர் அரஃபாத் அவர்களது சொந்த ஊர் திருவாளப்புத்தூர்.
படிப்பு முடித்து ( yasar arafat Attended Mohamed Sathak College of Arts & Science) தனது ஊரில் பல சேவைகளை செய்து வருவதோடு  துபாயில் பணி செய்கிறார் .
தமிழ்நாட்டிலும் தொழில்  செய்கிறார்
சிறந்த கவிஞர்.
புதுக்கவிதை எழுதுவதில் நிபுணர்
ஆய்வுக் கட்டுரை தருவதில் வல்லமை உடையவர்
அனைத்துக்கும் மேல் நல்ல குணமுடையவர்
நாகை மாவட்டத்தை சேர்ந்த மாயவரம் தாலுக்காவில் உள்ள திருவாளப்புத்தூர்  கிராமம் யாசர் அரபாத் அவர்களின் ஊர்.  திருவாளப்புத்தூருக்கு  மயிலாடுதுறையிலிருந்து நீடூர் வழியாகவும் திருவாளப்புத்தூர் செல்ல முடியும் எங்கள் ஊர் நீடூருக்கும் திருவாளப்புத்தூருக்கும் வெகு காலமாக நெருங்கிய தொடர்பு உண்டு

யாசர் அரஃபாத் அவர்களின் வலைப்பூ  என் பக்கம்
அவசியம் என் பக்கம் பாருங்கள்
அவரை வாழ்த்துவதில் நாம் மிகவும் மகிழ்வடைகின்றோம்
இறைவன் அவருக்கு நீடித்த ஆயூளை கொடுத்து அருள இறைவனை  பிரார்திக்கின்றோம்
Jazaakum'Allah Khairan.
நன்றி
"May Allâh reward him [with] goodness.".
-------------------------------------------------------------------------------------
 புதுக்கவிதை


குறளடி, சிந்தடி,
அளவடி, நெடிலடி
கழிநெடிலடி;
மூளைக்கு செலுத்துகையிலே
முகமும் வியர்க்கும்!

சந்தப்பா சிந்துப்பா
இசைப்பா வகைகளால்;
அப்பப்பா – எழுதவே
விரல்கள் நகராமல்;
எழுத்துக்களும்
தர்ணா போராட்டம்!

எதுகை மோனை
சீர், தளை,
அடி, தொடை – என
அங்குலம் அங்குலமாய்
அங்குசமாய்!

ஏக்கமாய் கலக்கமாய்
நோக்கையிலே;
பிறந்தது புதுக்கவிதை;
வரைமுறை இல்லை;
வரையும் முறையும்
தேவையில்லை!

பத்து வரிக்கும் மிகாமல்
கவிதை முழுமையடையாது
கட்டுப்பாட்டை உடைத்து;
விழுந்தது புதுக்கவிதை!
 
சொற்களில் புதைந்த
கவிதையை;
கருத்தில் புதைத்து;
புடைத்தது புதுக்கவிதை!!

புதுக்கவிதை கவிதை யாத்தவர்  யாசர் அரஃபாத்
நன்றி http://itzyasa.blogspot.in/

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

யாசர் அரஃபாத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

யாசர் அரஃபாத் said...

எளியவரை கண்ணியப்படுத்தும் உங்களுக்கு வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக!

நன்றி அண்ணே...

Al Haq Travels, Aravakurichi said...

நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

Al Haq Travels, Aravakurichi said...

நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.