Monday, January 24, 2011

கவி மாலை --by கலைமாமணி கவி. கா.மு. செரீப்

பாமணக்கும் நல்ல பதியாம் மயூரநகர்
தாமதிக்க   வாழும் தயாநிதியே  - நாமதிக்கும்
நண்பர் சயீத்தென்னும்   நாவலா தீன் நெறிப்
பண்பாளா நன்மை செய்யும்  பாங்களா - எண்ணலிலும்
நல்லதையே நாவுடையோய் - வல்ல
அறிவுடையோய் அன்புடையோய் யார்க்கும் உதவும்
நெறியுடையோய்  நீள்புகழோய் நெஞ்சம் - அறிந்தவர்கள் 
என்றும் மறவா இயல்புடையோய்  இன் தமிழால்
நன்று இந்த நாடறிந்த நற்கவிஜன்  - பொன்றாத
சீறாய்ப் புகழ் பாடும் சீர்சால் ஷரீபுகவி 
மாறாத அன்புடனே வாழ்திமிக நேரார்ந்த
ஆதரவுடனே அரிய சலாமுசைத்து
தூதாதாக விட்டேன் இத்  தூக்கு  உன்பால் -கோதரவே
அங்கு நான் வந்துற்று அழகுறவே சீறாவின்
பொங்கு தமிழ் பாட்டின் பொருள்கூ-உங்களரும்
நேசத்தைப் பாராமல் நித்திரையும் தான் துறந்து
சீரத்தைக் கேட்டச்  சிறப்புடனே -சாரமுன்
சொல்லாலே  வாழ்திச் சுகப்படும் தன்மையிலே
நல்லபடி யாய்ப் பொருளும் நல்கியே -எல்லையிலா
அன்பிலே எம்மை அமுக்கித் திணற வைத்த
நன்பரே  உங்களுக்கு நல்லிறைவன் -என்றேன்றும்
ஏற்ற நறும் இன்பமே ஈக இடர்களைந்து
போற்றுமுயர்  செல்வமெல்லாம்  போந்தளிக்க சாற்றினேன்
வண்ணக் கவிமடல் வாழ்க வளம் பெருக்கிக்
புண்ணியமும் சேரப் பொலிந்து !
( 1978 இல் பாடியது )
கவி மாலை --கலைமாமணி   வி கா.மு. செரீப்  நீடூர் அல்ஹாஜ், வழக்கறிஞர், ஏ.எம்.சயீத் அண்ணன் பற்றிப் பாடியது .
(ஏ.எம்.சயீத் அண்ணன் பற்றிப்கவிஞ்ர்கள் பல சந்தர்பங்களில் கவிதை பாடிருகிறார்கள். அந்த கவிதைகளில் சில ....  )
நன்றி : "நெஞ்சில் நிறைந்த நீடூர் சயீத்"
அ. மா . சாமி


1 comment:

vanjoor said...

தமிழகத்தின் தவ கவிஞர் கலைமாமணி வி கா.மு. செரீப் அவ‌ர்க‌ளையும்.

நீடூர் அல்ஹாஜ், வழக்கறிஞர், ஏ.எம்.சயீத் அண்ணன் அவ‌ர்க‌ளையும்

ஒரு சேர மலரும் நினைவுகளாக யாவரும் மகிழ தந்தமைக்கு நன்றிகள் பல்லாயிரம்.

வாஞ்சையுடன் வாஞ்ஜூர்