Friday, February 26, 2010

நான்?


Dr.Rudhran

எல்லாருமே எல்லாரைப்பற்றியும் மனத்தில் பிம்பங்கள் வைத்திருக்கிறார்கள். அவை நிஜத்தில் நினைத்தவாறு இருக்கும்போது மகிழ்வதும் இல்லாதபோது வெறுப்பதும் கூட இயல்புதான்.
மீண்டும் நான் புரிந்துகொள்ளப்படுவதில்லை என்று ஒரு புலம்பல் ஆரம்பிப்பதாய் இல்லை. ஆனாலும் என்னைப்பற்றி சிலர் கொண்டுள்ள பிம்பங்களுக்கு ஏற்ற வகையில் நான் இல்லை எனும்போது அவர்கள் என்மீது வெறுப்பை உமிழ்வதே இதைப்பற்றி நான் இப்போது சிந்திக்க காரணம்.
கடவுள் நம்பிக்கை உள்ளது என்று சொன்னால் நான் ஒரு RSS-BJP வெறியன், வினவுக்கு ஆதரவு தெரிவித்தால் நான் ஒரு தீவிரவாதி, சாதீய ஆதிக்கத்தை எதிர்த்தால் நான் ஒரு பெரியாரிஸ்ட், எப்போதாவது ஜோதிபாஸுவைப் பாராட்டினால் நான் ஒரு போலி கம்யூனிஸ்ட், லீனாவைப் பாராட்டாவிட்டால் ஒரு பெண்ணிய எதிரி, பெண் எழுத்தாளர்களை ஊக்குவித்தால் ஒரு பெண்ணியவாதி, கண்ணதாசனைப் பற்றி உருகினால் நான் கவிதை தெரியாதவன், பாரதியை நேசித்தால் நான் ஒரு பார்ப்பன ஆதரவாளன், கருணாநிதியைக் கண்டித்தால் ஆரியன், பார்ப்பனீயத்தை விமர்சித்தால் திராவிட வெறியன் இந்தப் பட்டியல் மிகமிக நீளம். இதில் எது நான்?


மேலும் படிக்க.. நான்?
மிக்க நன்றிhttp://rudhrantamil.blogspot.com/2010/02/blog-post_18.html

No comments: