Thursday, November 11, 2021

இறைமறை நனையும் இறைமறை களஞ்சியம்

 


Noor Saffiya

💞  இறைசிந்தனை

                   بسم الله الرحمن الرحيم.    

            السَّلاَمُ وَعَلَيْكُمْ  وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ🌹

                   اللهم اذقنا حلاوة معرفتك

                           اللهم آمين.   

இறைமறை நனையும்

இறைமறை களஞ்சியம்!

💫 ஹபீப்(ஸல்)அவர்கள் நினைவுகளோடு!

இஸ்லாமிய கேள்வி

பதில்போட்டி பகுதி # 💫

குர் ஆன்,ஹதீஸில்

கேள்வி பதில் !

_கேள்வி _ 07._

  **************

அல் குர்ஆனி_ல் அல்லாஹ்

தனது அடியான் இந்த

நிலையில் வருவதை தவிர

செல்வமோ, மக்களோ

அந் நாளில் பயன் தராது?

என்று கூறுகிறான்..??

எந்த நிலையில்..??

)நன்மையுடன்

)இறையச்சத்துடன்

) தூய உள்ளத்துடன்

பதில் :

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

) தூய_உள்ளத்துடன்

.                      اِلَّا مَنْ اَتَى اللّٰهَ بِقَلْبٍ سَلِيْمٍ

எவரொருவர்

பரிசுத்த இருதயத்தை,

அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ, அவர்

கண்ணியம் அடைவார்.”

அல் குர்ஆன் : 26:89

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

 ஹதீஸ் :

அல் குர்ஆன் :

                 وَاعْلَمُوْۤا اَنَّمَاۤ اَمْوَالُكُمْ وَاَوْلَادُكُمْ فِتْنَةٌ

நிச்சயமாக

உங்களுடைய செல்வங்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுக்கு சோதனையாக

இருக்கின்றன என்பதை... நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்."

அல் குர்ஆன் :  8 : 28

ஆனால், கருணையாளன்

அல்லாஹ் மனிதர்களுக்கு

அவர்களின் தேட்டத்தின்

வாயிலாக வழங்கும்

இந்த செல்வங்களை நம்

நிம்மதிக்கு காரணமாக

அமைத்துக் கொள்வதும்

சாத்தியம் தான்.

                اَلَّذِيْنَ اٰمَنُوْا وَتَطْمَٮِٕنُّ قُلُوْبُهُمْ بِذِكْرِ اللّٰهِ 

                اَلَا بِذِكْرِ اللّٰهِ تَطْمَٮِٕنُّ الْقُلُوْبُ

"அவர்கள் (மெய்யாகவே) விசுவாசங்கொண்டார்கள், இன்னும், அல்லாஹ்வை

திக்ரு செய்வது கொண்டு அவர்களுடைய இதயங்கள்

அமைதி பெறுகின்றன."

அல்குர்ஆன் : 13:28

                           وَلَا تُخْزِنِىْ يَوْمَ يُبْعَثُوْنَۙ

                           يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَّلَا بَنُوْنَۙ

                          اِلَّا مَنْ اَتَى اللّٰهَ بِقَلْبٍ سَلِيْمٍ

மேலும், “(படைப்பினங்கள் உயிர் கொடுக்கப்பட்டு) எழுப்பப்படும் (மறுமை) நாளில் நீ என்னை இழிவு படுத்தாதிருப்பாயாக!”

செல்வமும், குமாரர்களும் யாதொரு பயனளிக்காத

அந்த நாளில்,ஆயினும்,

பரிசுத்தமான இதயத்துடன்

தனது இரட்சகனாகிய

அல்லாஹ்விடம் யார்

வந்தாரோ அவர் தவிர

மற்ற எவருக்கும்

பயனளிக்காத நாள்.

அல்குர்ஆன் : 26:87, 88, 89

இந்த இறை வசனங்களில்,

இம்மையில் இறைவனை

நினைவுகூர்வது, மறுமையில்

பரிசுத்தமான இதயத்துடன்

அல்லாஹ்விடம் வருவது

ஆகியவை, ஒன்றோடொன்று

தொடர்பு கொண்டுள்ளது!

            ✨⚡✨⚡✨⚡✨

                        امین یا رسول اللہ

                         صلی اللہ علیہ🌹

                    جَزَاكَ اللهُ خَيْرًا كَثِيرًا🌷

             👑الحمد لله على كل حال...👑

இதை படிக்கும் உறவுகளுக்கு

மனமார்ந்த நன்றிகள் கோடி!

அர் ரஹ்மான் அவர்களின்

பாவங்களை மன்னித்து

ஹலாலான அனைத்து

ஹாஜத்துகள் நிறைவேற்றி,

நோயற்ற வாழ்வையும், குறைவற்ற செல்வமும்,

கண்மணி ஹபீபினால் பெறுவோம் நாம். ஆமீன்...!

                  اللهم اقض حوائجهم وشف

           أمراضهم وقض ديونهم ويسر أمورهم

               ياأرحمر الراحمين بحق سيدنا

           مولىنا محمد صل الله عليه وسلم..

🖋️  நூர்ஷஃபியா காதிரியா

No comments: