Monday, December 18, 2017

வாழ்வியல் தத்துவங்கள் ....! ( பாகம் 2 )

எளிமையை ஏற்றெடு
வளமை தானேவரும்
பொறுமையை கடைபிடி
பொற்காலம் நெருங்கிவரும்
*
மனக்கதவை திறந்துவை
மகிழ்வுவந்து தங்கும்
பண்புடன் பழகு
அன்புகள் நிலைக்கும்
*
பழிபோடுவோரை வெட்டிமாற்று
மீண்டும் அண்டவிடாதே
தன்னிலையை தக்கவை
சார்ந்தோரை தூக்கிவை
*

துவண்டு விடாமல்
துயரத்தை துரத்திவிடு
நிதானம் கடைபிடி
நிம்மதி தேடிவரும்
*
தன்னை நம்பு
தன்னபிக்கை பெ று
ஆணவம் தவிர்
ஆனந்தம் பெ று
*
அசூயையை அகற்று
இலக்கை முன்னிறுத்து
முயற்சியை தொடர்
நினைத்தது நிறைவேறும்
*
பயிற்சி எடு
முயற்சி செய்
முடங்கி விடாதே
வெற்றி உன் முன்னிருக்கு
ராஜா வாவுபிள்ளை

No comments: