Sunday, July 3, 2016

* * * * அன்புடன் புகாரி புதிய பதிவுகள் * * *



மனிதர்களுள் வெறியர்கள் உண்டு.
வக்கிரக் காரர்கள் உண்டு.
அவர்கள் எல்லா மதங்களிலும் இருப்பார்கள்.

ஆகவே வெறியர்களை மதங்களின் பெயரால் அழைத்து பொதுமக்களின் உணர்வுகளைத் தூண்டி நாச வேலையில் ஈடுபடாதீர்கள் தயவு செய்து என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.

வேறு எப்படித்தான் சொல்வது என்றே புரியவில்லை எனக்கு!
* * * * அன்புடன் புகாரி புதிய பதிவுகள் * * *

அறம் இல்லாத அறிவு பணம் சம்பாதிக்கும் வழியைத்தானே பார்க்கும்?

அறம் சொல்லித் தர இங்கே ஏதாவது ஓர் அமைப்பு உண்டா?

அறம் சொல்ல வந்த மார்க்கங்களையும் அவதூறு சொல்லித் தீவிரவாதக்கணக்கில் சேர்த்தாகிவிட்டது.

இனி அறம் இல்லாத அறிவு சுதந்திரமாக இயங்கும்தானே?

பிள்ளைகளுக்கு அறம் ஊட்டி வளர்க்க அரசு எந்த முயற்சியும் செய்யாது.

ஏனெனில் அறம் ஊட்டி வளர்க்கப்பட்டால் ஊழலை எதிர்த்து உண்டு இல்லை என்று செய்துவிடுவார்கள் அறத்தில் வலுவானவர்கள்.

அறமற்ற தேள்களின் கூடாரத்தில் அன்பு எங்கே வாழப்போகிறது அமைதி எங்கே வாழப் போகிறது நேர்மை எங்கே வாழப்போகிறது சுதந்திரம் எங்கே வாழப்போகிறது?
* * * * அன்புடன் புகாரி புதிய பதிவுகள் * * *

சொல் வன்முறை
செயல் வன்முறை
இரண்டும் வன்முறைதான்
அளவில் சிறிது பெரிது என்றில்லை

சொல் வன்முறை
சற்றே ஆபத்தானதும்கூட
ஏனெனில்
ஒரு சொல் வன்முறைதான்
பல செயல் வன்முறைகளைத்
தூண்டிவிடுகிறது
* * * * அன்புடன் புகாரி புதிய பதிவுகள் * * *

ஆடுகளுக்குள்
ஒற்றுமை இல்லாவிட்டால்
ஓநாய்களுக்குக் கொண்டாட்டம்தானே

ஒழுக்கமுடையவர்களுக்குள்
ஒற்றுமை இல்லாவிட்டால்
வெறியர்களுக்குக் கொண்டாட்டம்தானே

ஜாதிகளால் பிரியாதீர்கள்
மதங்களால் பிரியாதீர்கள்
மனித நேயத்தால் ஒன்றுபடுங்கள்
ஓநாய்களை விரட்டுங்கள்

பெண்ணுரிமை பெறலாம்
தனிமனிதன் சுதந்திரம் பெறலாம்
மனிதநேயம் உச்சத்தைத் தொடலாம்

சொர்க்கம் மண்ணில் உறுதி!
* * * * அன்புடன் புகாரி புதிய பதிவுகள் * * *

வன்முறையற்ற உலகமே 
வரமாக வரவேண்டும்

கைகட்டித் தவமிருக்காமல்
கண்டதும் தவறுகளைத் திருத்திக்கொள்வோம்

கரம்பற்றி உறவு பாராட்டித்
தரமான வாழ்வைப் பெறுவோம்

அசைக்கவியலா அறிவுகொண்டு
அத்துமீறல்களைத் துடைத்தெறிவோம்

அறம்கொண்ட அறிவுக்குமுன்
அணுகுண்டும் வெங்காயவெடிதான்
* * * * அன்புடன் புகாரி புதிய பதிவுகள் * * *


http://anbudanbuhari.blogspot.in

No comments: