Tuesday, March 22, 2016

ஒருவர் மூலம் ஒருவர் நண்பர்களாக்கப்படுவோம்

ஒருவர் மூலம் ஒருவர்
நண்பர்களாக்கப்படுவோம்
முகநூல் வாயிலாக
முகம் நேரில் காணாவிடினும்
முகப்பு பக்கமே ஆறுதலாகும்

அவ்வழி வந்தவர்
ஜனாப் முஹம்மது அலி அவர்கள்
நேரில் கண்டதில்லை
காண நாடுகிறேன்
பேசிக் கொண்டதில்லை
பேச விழைகிறேன்

அவர் கவிஞர்களை
கொண்டிருப்பினும்
கவிஞர்கள் யாவரும்
அன்னாரை சார்ந்தவர்கள்

விமர்சிப்பவர்கள் ரசிகர்கள்
இல்லையேல்
கவிதையும் இல்லை
கவிஞர்களும் இல்லை

முகநூல் நண்பரில் ஒருவராக
அன்னாரைப் பெற்றமைக்கு
நான் மட்டுமன்று
என்
முகநூல் பக்கமே மகிழ்கிறது.....

No comments: