Friday, January 1, 2016

புத்தாண்டு 2016 நம்பிக்கை - இறைவன் மீது வைத்த நம்பிக்கை நம் மீது வைத்த நம்பிக்கை

 நம்பிக்கையே வாழ்வு. இறைவன் மீது வைத்த நம்பிக்கை நம் மீது வைத்த நம்பிக்கை.
நல்லதையே நாடுவோம்.நல்லதையே செய்வோம்.வருவதை எதிர்கொள்வோம் .
 நிகழ்வது நிகழட்டும்.புதிய ஆண்டு என்று ஒரு கற்பனை கொண்டு நிகழும் நாளை ஒதுக்க வேண்டாம். இன்றைய நாளில் செய்வதை  செய்து  அதன் விளைவை  இறைவனிடம் விட்டு விடுவோம் .
கடமையை ஒதுக்கி பலனை தேடுவதில் பயனில்லை.
 ஒட்டகத்தைக் கட்டு இறைவனிடம் பாதுகாப்பு கேள்.-நபிமொழி

 Anas (radi Allahu anhu) reported that a person asked Rasul Allah (sal Allahu alaihi wa sallam), “Should I tie my camel and have Tawakkul (trust in Allah for her protection) or should I leave her untied and have Tawakkul.” Rasul Allah (sal Allahu alaihi wa sallam) replied, “Tie her and have Tawakkul.” (Hasan) [Jami At-Tirmidhi]



இன்றையே தினமே நம்மிடம்  இருப்பது போல் வாழ்வோம் . நேற்றைய தினம் தன்னுடைய நன்மை மற்றும் தீமையுடன் கடந்து விட்டது. நாளைய தினமோ இன்னும் வந்தடையவில்லை.இன்றைய தினத்தை உயர்வானதாக்கிக் கொள்வோம். இந்த நாளில் விழிப்பான மனதுடன் நாம் நமது கடமையை செய்வோம்  தொழ வேண்டும், குர்ஆனை புரிந்து ஓதுவோம் , மனமார்ந்து அல்லாஹ்வை நினைவு கொள்வோம் . இந்த நாளில் நமக்கு கிடைத்ததில் மகிழ்வடைவோம். வண்டினம் ஆரவாரம் செய்து வருதலால் அஞ்சி நடுங்கும் மனதை அறிந்த நாம் நம் செயலின் விளைவால் தீமையாகிவிடுமோ என அஞ்சி நடுங்கும் மனதை பெற்றிட வேண்டும்.  தீயின் வேகத்தை நீர் கொண்டு அடக்குதல் போல் பெருமை கொண்ட மனதை இறையின் நினைவு கொண்டு அடக்குதல் வேண்டும் 
 இன்றைய தினம் மகிழ்வாகவும், சாந்தியுடனும்  மனநிறைவுடன் இருப்போம்.

ஆகவே நான் உமக்குக் கொடுத்ததை (உறுதியாகப்) பிடித்துக் கொள்ளும்; (எனக்கு) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராகவும்) இருப்பீராக”. (திருக்குர்ஆன் 7:144)
பறவைகள் போல்,  நாம் தேவையில்லாத கோபம், வருத்தம், வலி, பயம்  இவைகளை தூக்கிச்  செல்வதை தவிர்ப்போம்

வாழ்க்கை அழகானது ... அது தொடரட்டும்  ...

  LOVE & BEST WISHES With warm regards...

In the name of Allah The most Gracious The most Merciful!
Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah.
Every mistake is from me, and any Truth is from Allah, The Enduring One, He is the Enduring One, I know nothing save that which He hath taught me.
அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.
S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

                                                          S.E.A.Mohamed Ali (Jinnah) 
                                                                                        nidurali  "நீடூர் அலி"

No comments: