Wednesday, June 18, 2014

காலையில் பேருந்தில் கண்ட காட்சி



இருந்தாலும்......

நிற்கவும் இடமில்லாத
நகரப் பேருந்து.
அலுவல் அவசரங்கள்
ஆயிரம் பரபரப்பு
நெருக்கடிக்கும் போக்குவரத்தில்
நேரத்திற்குச் செல்ல முடியுமா?
அலைபாயும் என்பார்வைக்கு
அகப்படும் ஒரு காட்சி:
ஓட்டுநர் இருக்கைக்குப் பின்
வாய்த்திருக்கும் சக்கரமேடையின்
இருக்கையில்லா பேரிருக்கையில்
ஏறி அமர்ந்த ஒருவர்
சுற்றுப்புற அக்கறையின்றி
சூழல் மறந்து
தண்மை கொண்டு
தன்கால் நீட்டிச் சாய்ந்து
வேதப் புத்தகம்
வாசித்தபடி.. .

(காலையில் பேருந்தில் கண்ட காட்சி)
Riyadh, Saudi Arabia 
 
                              Fakhrudeen Ibnu Hamdun

No comments: