Friday, December 24, 2021

இருபத்து ஒன்று பெண்களின் திருமண வயதானால்.....! / DR.HABIBULLAH

 


21

இருபத்து ஒன்று

பெண்களின்  திருமண

வயதானால்.....!

உடல் ரீதியாக, மன ரீதியாக

அறிவு ரீதியாக சில பெர்சனல்

முடிவுகளை, தானே எடுத்துக்

கொள்ளும் சுதந்திரம், இன்றைய

உலகில் இளம் பெண்களுக்கு

கிடைக்கலாம்.பொருளாதார

ரீதியாகவும்  பெண் வெற்றி

பெற்றால்... திருமண மேட்ச்,

மேட்  அல்லது ஃபிரண்ட்ஸ்

செலக்சன், ஜாப் செலக்சன்

போன்றவற்றில் பெற்றோரை

புறக்கணித்து தனி முடிவுகளை

தானே எடுக்கவும் துணிவும் வரும்.

குழந்தை பெறும் வயதையும்

சற்று தள்ளிப் போட முடியும்.

இதனால், இருபத்தொரு வயது

நிரம்பாத இளம் பெண்ணை

சட்ட பூர்வமாக திருமண

செய்ய தடை ஏற்படலாம்.

பதினெட்டு வயது நிரம்பிய

ஆண் - பெண், அரசியலில்

எம்எல்ஏ எம்பிக்களை வாக்க

ளித்து  தேர்வு செய்யும் நிலை

உள்ள போது, திருமணம் மட்டும்

சட்டப்படி செய்ய இயலாது

என்றால் லீகல் ஏஜை, எப்படி

நிர்ணயம் செய்வது!

டீன்ஏஜ் பருவம், பதிமூன்று

வயதில் துவங்குகிறது.

செக்ஸுவல் டெவலப்மெண்ட்

உடலில், மனதில், ஹார்மோன்

களில் மாற்றம் செய்யும் நேரம்.

இப்போதெல்லாம், மீடியாக்கள்

டீன்ஏஜ் குழந்தைகளை வைத்து

டீன் ஷோக்கள் நடத்தி, யங்

மைன்ட்ஸை, கரப்ட் செய்து

வருவது...யங் குழந்தைகளை

டிரக்ஸ்,மது போதை,செக்ஸ்

அட்வன்ஜர்களில் நிதானம்

தவற வைக்கிறது. இதன் மூலம்

பெண் குழந்தைகள், டீன்

பிரிக்னன்ஸி, அபார்ஸன்

எஸ்டிடி போன்ற செக்ஸ்

வியாதிகளில் அதிக அளவில்

சிக்கி சீரழியும் நிலை இங்கும்

உருவாகி விட்டது.”செக்ஸ்

கிளிப்கள்சமூக வலை

தளங்களில் அதிகம்

இளைஞர் மத்தியில்

பகிரப்பட இந்த சூழலும்

ஒர் காரணம். பாலியல்

வன்முறை - பலாத்காரம்

பெண் குழந்தைகளுக்கு

அறிந்த தெரிந்த பெரிய

மனிதர்களால் நிகழ்வது

மேலும் தொடரலாம்.

திருமண வாய்ப்பு, வயதால்

தள்ளிப் போவதால் கூடா

உறவு முறைகள் ஏற்பட

வாய்ப்புகள் அதிகம்.

மேநாடுகளில், சரியான

செக்ஸ்  எடுகேசன் மூலம்

டீன்ஏஜ்  கவுன்சலிங் முறையில்

பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி

நாட்களாகி விட்டது. ஐயுடி

கருத்தடை இம்ப்லாண்ட்

மாத்திரை, பேட்ச், ரிங்

இன்ஜெக்சன் எல்லாம்

அங்கு சர்வ சாதாரணம்.

மதம், பண்பாடு, கலாச்சாரம்

போற்றும் நமது நாட்டில்

இந்த சிந்தனைகள்

இப்போது எடுபடாது.

இது போன்ற தாறுமாறான

செக்ஸ் வக்கிரங்களை

தவிர்க்கவே, பெற்றோர்

தங்கள் பெண்களை விரைந்து

திருமணம் செய்து வைக்க

விளைகிறார்கள். வயது

அதிகரிக்கும் நிலையில்

திருமணத்தை தள்ளி

போடலாம்.காதல்

உணர்வுகளை ஒத்திப்

போடுவது எப்படி!

பெண்கள் திருமண வயது

அதிகம் தள்ளிப் போனால்

கலாச்சார சீரழிவுகள் மேலும்

அதிகரிக்கக் கூடும். பெண்

ணின் திருமணம் அதிக நாள்

தள்ளிப் போவது, பெற்றோரை

மனம் கலங்க வைக்கும்.

மதமும் குடும்பமும் மட்டுமே

குழந்தைகள் மனதில் நல்ல

ஒழுக்கத்தை விதைக்க

துணை  புரிகின்றன.புதிய

சட்டங்கள் இளைஞர் தம்

ஒழுக்கத்தை காப்பாற்றுமா

என்பதை பொறுத்திருந்து

தான் பார்க்க வேண்டும்.

DR.HABIBULLAH



Senior Consultant Paediatrician

Adolescent Physician & Psychologist

No comments: