Sunday, August 29, 2021

 


#அல்ஹம்துலில்லாஹ் ...

முற்றமெல்லாம் மலர்கள்

மனங்களெல்லாம் மணங்கள்

மாலை நேரம்

நட்புத் தோட்டங்கள்

கூட்டமாக வந்து

மாலையாக மாறி

மணம் பரப்பிய மாலையானது

மனசுக்கு மலைப்பானது !

எத்தனை அன்பு

எத்தனை சினேகம்

கல்யாண விருந்துக்கு

வீடு தேடி வந்து அழைத்தாலும்

வர முடியாதவர்கள்

ஒரு போன் அழைப்பிலும்

ஒரு வாட்சப் பகிர்விலும்

ஒரு பேஸ்புக் பதிவிலும்

உள்ளம் உவந்து

வரிசை வரிசையாய்

வந்தார்களே ....

இத்தனை அன்பைப் பெறுவதற்கு

என்ன தவம் செய்தேன்

என்னிறைவா ..

அத்தனை உள்ளங்களிலும்

உன் அன்பையே கண்டேன்

அத்தனைக் கண்களிலும்

உன் கருணையையே தரிசித்தேன்

வாழ்த்துக்குரியவன் நீ

வாழ்த்த வைத்தவனும் நீ

புகழுக்குரியவனே

என்னை

நேசித்தவர்களை

நீ நேசிப்பாயாக

அவர்களுக்கு

அழகானதையே அருள்வாயாக

அவர்களின் சந்தோஷத்தில்

என்னை இன்புறச் செய்வாயாக !

ஆமீன் !

நமது முற்றம் நட்பு வட்டம் நடத்திய விழா

எதிர்பார்ப்புகளை விட இனிமையாக

சிறப்பாக நடைபெற்றது .

அதில் கலந்து கொண்ட அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நன்றி !

விரிவான செய்திகளும் படங்களும்

இன்ஷா அல்லாஹ் ..

நாளை !

Abu Haashima

No comments: