Tuesday, March 19, 2019

நியூஸிலாந்தின் படுகொலை சொல்லும் பாடம்..!!

வெறியூட்டப்பட்ட ஒருவன்..

கண்மூடித்தனமாக கையிலுள்ள தானியங்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே செல்கிறான்..

செத்து கிடக்கிறார்கள்..

ஆனாலும் அவன் மனம் அமைதி அடையவில்லை...

பிணத்தின் மீதும் தன் ஆத்திரத்தை காட்டுகிறான்..

அவ்வளவு வெறுப்பு...


அப்படி ஒரு வெறி...

வெறுப்பால் வெறியூட்டப்பட்டவன் எப்படி நடந்து கொள்வான் என்பதற்கு இது ஒரு நிதர்சன சான்று..

இதுபோன்ற ஆயிரம் சான்றுகள் முஸ்லிம்களுக்கு எதிராக உலகம் முழுவதும் நிரம்பி வழிகின்றது...

கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியில் எடுத்து மின்சார வயரில் இணைத்துக் கொன்ற மூர்க்கத்தையும் முஸ்லிம் சமுகம் பார்த்திருக்கிறது..

ஆனாலும் இஸ்லாம்..

உலகின் எல்லா நிலத்திலும் நீரிலும் ஆரோக்கியமாய் வளர்ந்து கொண்டே செல்கிறது..

இன்று இரத்த சாட்சிகளான முஸ்லிம்களின் இரத்தமும்

இதுபோன்று வருடம் முழுவதும் சிந்தும் இரத்தமும் தான் வளரும் பயிர்களுக்கு உரம்!!

ஷைத்தானால் வெறியூட்டப்பட்டவர்கள் முஸ்லிம்களை கொல்லாதிருந்தால் ஆச்சர்யம்...

உலகம் unipolar எனும் ஒற்றை உலகம் அல்ல..

உலகம் இரண்டாகும்...

ஒன்று படைத்த இறைவனின் உலகம்!

மற்றொன்று இறைவனுக்கு மாறு செய்யும் ஷைத்தான்களின் உலகம்..

ஷைத்தானின் உலகில் எந்த மனிதனுக்கும் வாழ வழியில்லை.. பாதுகாப்பாக வாழும் வாழ்வுரிமையில்லை..

இறைவனின் உலகில் போர்க்களம் என்றாலும் மனிதனை வீணாய் கொல்லவும்..

மனித உயிரை விரயமாக்கவும் அனுமதியில்லை.

இதோ வரலாற்றில் ஒரு நிகழ்ச்சி..

இஸ்லாமிய தூதுவை கொண்டு சென்ற தூதுவனை ரோம் கொன்று விடுகிறது..

அதற்கு எதிராக படை அனுப்புகிறார்கள் நபி முஹம்மது صلى الله عليه وسلم ..

எதிராளியும் படையோடு வருகிறான்..

அவன் திரட்டிய படையின் பெருக்கம் ஒரு லட்சம்..

அதை எதிர்க்க திரண்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை மூவாயிரம்..

படையை அனுப்பு முன் இடப்பட்ட கட்டளை..

களத்தில் போர் செய்யும் வீரர்களை தவிர்த்து யாரையும் கொல்லக் கூடாது..

இறந்தோரிடம் வீரத்தைக் காட்டக் கூடாது..

இறந்தோரின் உடலை சிதைக்க கூடாது..

பெண்கள் குழந்தைகள் வயது முதிர்ந்தோர் என போரில் ஈடுபடாது ஒதுங்கி இருப்போரை கொல்லக் கூடாது..

வணக்கத்தலங்களில் இருப்போரை மடங்களில் தங்கியிருப்போரை அவர்கள் ஆணோ பெண்ணோ யாராயினும் கொல்லக் கூடாது..

மரங்களை வெட்டக்கூடாது..

பயிர்களை நாசமாக்க கூடாது..

எதையும் தீயிட்டுக் கொளுத்தக் கூடாது..

எல்லா நிலையிலும் இறைவனுக்கு மட்டும் அஞ்சும் ஓர்மையை கை விட்டு விடக்கூடாது...

அறிவுரைகளை சுமந்த சென்ற 3000 வீரர்கள்..

லட்சத்தில் திரண்டவர்களை திணறடித்து விட்டு வந்தார்கள்..

இன்றும் அரபுலகில் மேற்கத்திய உலகம் நேரடியாய் ஆள வழியின்றி வாசலை மூடி வந்தார்கள்...

இது வீரம்..

இது படைத்த இறைவனின் உலகம்..

படைத்தவனை தொழ பள்ளிவாசலுக்குள் இருந்த நிராயுதபாணிகளைக்

கொன்றவனின் உலகம் ஷைத்தானின் உலகம்...

இனி மக்கள் முடிவு செய்ய வேண்டும்..

நாம் யார்?

இறைவனின் உலகில் வாழும் இரக்கம் கொண்டோரா..

அயலானை நேசிப்பவரா?

இல்லை

ஷைத்தானின் உலகில் வாழும் மிருகமா?

No comments: