Tuesday, March 19, 2019

ஷாஜகான் மகள் ஜஹானாரா உறவு விவாதப் பொருளானது ஏன்?

மும்தாஜின் மறைவுக்கு பிறகு மகன் தாரா ஷிகோஹ் மற்றும் மகள் ஜஹானாராவையே முற்றிலுமாக சார்ந்திருந்தார் ஷாஜகான். ஜஹானாரா, 1614 ஏப்ரல் இரண்டாம் தேதியன்று பிறந்தார். ஷாஜகானின் மற்றொரு மனைவியான ஹரி கானாம் பேகம், ஜஹானாராவுக்கு அரச குடும்பத்தின் பழக்கவழக்கங்களை கற்பித்தார். ஜஹானாரா, மிகவும் அழகானவர் என்பதும், புத்திசாலி என்பதும், பாரசீக மொழியில் இரண்டு நூல்களை எழுதினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகலாய பெண்களில் ஜஹானாரா பேகம் மிகவும் பெரிய செல்வந்தராக கருதப்பட்டார். அந்த காலத்திலேயே அவரது ஆண்டு வருமானம் 30 லட்சம் ரூபாய் (இன்று ஒன்றரை பில்லியன் ரூபாய்க்கு சமம்) என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் தகவல்.

No comments: