Tuesday, March 19, 2019

ஓ வாக்காள பெருமக்களே!

Vavar F Habibullah
இதோ,
நாம் வாழும் தேசத்தில்
தேர்தல் திருவிழா களை
கட்டதொடங்கி விட்டது.
உங்களின் பொன்னான
வாக்குகளை அளித்தே
உங்களை ஆளப் போகும்
மன்னாதி மன்னர்களை நீங்கள்
தேர்வு செய்யப் போகிறீர்கள்.


உங்கள் முன் தலைவர்கள்
ஆடம்பரமாக வருவார்கள்.
உங்கள் அலங்கோலங்களை
அலங்கார வார்த்தைகளால்
படம் பிடித்து காட்டுவார்கள்.
ஏழ்மையை காட்டி உங்கள்
ஜனநாயக உரிமையான
வாக்குகளை அள்ளிச் செல்ல
வருவோரிடம் ஏமாந்து
விடாதீர்கள்.

கூட்டணியே வெற்றிக்கான
கொள்கை என்ற நிலையில்
கட்சியா,சின்னமா...இல்லை
நாம் விரும்பும் வேட்பாளரா!
சற்று சிந்தியுங்கள்.

உங்கள் குழந்தைகள்
கல்வி மேம்பட
நல்ல கல்வி கூடங்களை
தேர்வு செய்யும் நீங்கள்
உங்கள் தொகுதி மேம்பட
நல்ல வேட்பாளரை தேர்வு
செய்யுங்கள்.டெல்லிக்கு
கனிசமானவர்களை தேர்வு
செய்து அனுப்பியும் உங்கள்
தேவைகளை பூர்த்தி செய்யாத
சோம்பேறிகளை மீண்டும்
தேர்வு செய்யாதீர்கள்.

தன்மான தமிழ் இனம்
காக்க சிம்மக் குரல்களே
இப்போது தேவை நமக்கு.
சிங்கக் குட்டிகளை ஆடுகள்
வழி நடத்த இனி ஒரு போதும்
அநுமதி வழங்காதீர்கள்.
உங்கள் வாக்கு என்ற பலமான
ஆயுதத்தை வரும் தேர்தலில்
சரியாக பயன் படுத்துங்கள்.
உங்கள் வாக்கே உங்கள் பலம்
என்பதை உறுதியாக நம்புங்கள்

.Vavar F Habibullah


No comments: