Monday, February 11, 2019

ரஜினிகாந்தின் செயல் பாராட்டுக்குரியது...

தனது மகளின் மறுமணத்தை ஊரறிய நிகழ்த்திய நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினர் பாராட்டுக்குரியவர்கள்..
என்னதான் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் திகழ்ந்தாலும் ஒரு தந்தை எனும் நிலையில் ஐந்து வயது குழந்தையுடன் மகள் விதவையாக வீட்டில் இருப்பதை மனச்சுமையாக தான் உணர்ந்திருப்பார்..
பெரும்பாலும் மறுமணம், விதவைத்திருமணம் இரு வீட்டாரும் மட்டுமே கலந்து கொள்ள நடைபெறும் சூழலில் தனது மகளின் மறுமணத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் திரையுலக, அரசியல் பிரபலங்கள் அனைவரையும் அழைத்து பகிரங்கமாக நடத்திய செயல் சமுதாயத்துக்கு ஒரு படிப்பினை தரும் நிகழ்வு கூட...
இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்தும், முஸ்லிம்கள் நடைமுறைப்படுத்தும் விதவைகள் மறுமணத்தை மற்ற சமூகத்தவரும் பின்பற்றி கணவர் மரணமடைந்ததாலோ அல்லது விவாகரத்து பெற்றோ தங்கள் வீடுகளில் அடைந்து கிடக்கும் பெண் பிள்ளைகளுக்கு விடியல் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது... Colachel Azheem

No comments: