Friday, February 22, 2019

ஆத்மாவைத் தேடி


dr.Vavar F Habibullah
ஆத்மா எங்கே இருக்கிறது!
மரணம் நிகழ்ந்த பின் உடல்
அழிந்து விடும். மனம் என்ற
கருவி செயல்பட ஒத்துழைப்பு
தரும் மூளையும் மக்கி விடும்.

உடல், மனம், ஆத்மா
என்ற மூன்றும் கலந்தவன்
தான் மனிதன் என்றால்...
உடல் தெரிகிறது
மனம் புரிகிறது
ஆனால் ஆன்மா என்பது
மனித உடலில் கலந்த
மாயையா....இல்லை
மனித உடலை தாண்டி
மனிதனோடு உலவி
அவனை வேவு பார்க்கும்
வேற்று கிரக சாட்சியா!


உடலை, உடல் உழைப்பை
காசுக்கு விற்கலாம்
மன சாட்சியையும்
விற்பனை செய்யலாம்
அதுபோல் ஆத்மாவை
விற்பனை செய்ய முடியுமா!
மனிதன் மறைந்த பின்
அவனில் வாழ்ந்த ஆத்மா
போவது எங்கே!
நல்ல உடல், கெட்ட உடல்
நல்ல மனம், கெட்ட மனம்
என்பது போல்
ஆத்மாவையும்
நல்லது கெட்டது என்று
இனம் பிரிக்கலாமா!

நாளைய
சொர்க்கம் நரகம்
என்பதெல்லாம் மனிதன்
தங்குமிடமா இல்லை,அவன்
ஆத்மாவின் புகலிடமா!

உடல் வளர்ச்சி
மன வளர்ச்சி
என்பது போல்
ஆத்மா வளர்ச்சி
அடைவது எப்படி!
ஆத்மாவின் இருப்பிடத்தையே
அறியாமல் ஆத்மாவை சுத்தம்
செய்வது எப்படி!

dr.Vavar F Habibullah

No comments: