Sunday, February 24, 2019

"இன்று நான் பேரானந்தம் அடைந்தேன்"-.கவிஞர் புகாரி

கவிஞர் புகாரி
2 hrs ·
ஒரு படமும் ஒரு காணொளியும் இன்று நிகழ்ந்து முடிந்த விருது விழாவைச் சொல்லும். அதில் நான் பெற்ற விருதினைச் சொல்லும். பின் விரிவாக இதுபற்றி நான் எழுதுவேன். மேலும் புகைப்படங்கள் இடுவேன்.

இன்று நான் பேரானந்தம் அடைந்தேன்.

விருது கிடைத்தது எனக்கல்ல. என் கவிதைகளுக்குத்தான் என்று சொல்வேன். ஏனெனில் நான் கவிதைகள் எழுதுவதில்லை. என் கவிதைகள்தான் என்னை இழுத்து வைத்துத் தன்னை எழுதிக்கொள்கின்றன.

விருது எனக்கல்ல, என் கவிதைகளை ஒவ்வொன்றாய் அடுக்கிவைத்து அதன்மேல் என்னை ஏற்றிவிட்டார்கள், தங்கப்பதக்கம் தந்து பாராட்டினார்கள்.

வெகு சிலரையே என்னால் விருது விழாவிற்கு அழைக்க முடிந்தது. காரணம் இடப்பற்றாக் குறைதான்.

ஆகவே தமிழ்நாட்டு உறவுகளை மட்டுமே அழைத்திருந்தேன். அதிலும் கடுமையாகத் தேர்வு செய்து அழைக்கவேண்டியதாகிவிட்டது. அழைக்கப்படாத அன்பு உறவுகள் அனைவரும் அன்புடன் என்னை மனிக்க வேண்டும்.

அழைத்தவர்களுள் ஓரிருவரைத் தவிர (தவிர்க்கமுடியாக் காரணத்தால்) மற்ற அனைவரும் வந்து அன்பைப் பொழிந்தனர். என் இதயத்தை பலமடங்காய்ப் பெருக்கச் செய்தனர்.




கவிஞர் புகாரி

No comments: