Wednesday, June 1, 2016

பள்ளிக்கூடங்கள் திறந்தாச்சு ....

Abdul Gafoor 

பள்ளிக்கூடங்கள் திறந்தாச்சு ....
சீருடைகள் அணிந்த
இளவரசர்களும் இளவரசிகளும்
புத்தகங்களோடு புறப்பட்டாச்சு ....
கற்கும் கல்விதனை
அறிவெனும் உளியெடுத்து
செதுக்கிடும் சிற்பிகள்
வல்லரசாகும் இந்தியாவின்
பாதைகளை சீரமைத்து
வலுவாக்கும் மேதைகள் ....
தேர்வு விடுமுறைகளில்
அள்ளிக் குவித்த
ஆனந்த நினைவுகளோடு
பள்ளிகளுக்கு செல்கிறார்கள் ....

வலிக்கும் கைகளோடும்
முதுகினில் பைகளோடும்
வருங்கால கனவுகளை
நெஞ்சம் சுமக்க
புத்தக முடிச்சுகளோடு
பள்ளிக்கூட இருக்கைகளில்
தஞ்சம் அடைகிறார்கள் ....
மாணவ மணிகளே
மாறும் வகுப்பறைகளில்
புதிய ஆசிரியர்கள்
கூறும் அறிவுரைகளுக்கு
தம்தமது செவிப்பறைகளில்
இடங்கள் ஒதுக்கிடுக ....
ஓயாத கல்வியையும்
தேயாத அறிவையும்
மெருகூட்டும் பரீட்சைகளில்
ஒழுக்கமாய் விடையளித்து
மதிப்பெண்களை வென்றிடுக
முன்னேறும் களங்களில்
கம்பீரமாய் நின்றிடுக ...
Abdul Gafoor 
அப்துல் கபூர்

No comments: