Friday, June 5, 2015

இளவேனில் துவங்கிய ஒரு தருணத்தில்../ புதுகை அப்துல்லா

இளவேனில் துவங்கிய
ஒரு தருணத்தில்
முதலில் சந்தித்தது
நம் கண்கள்.

சந்தித்த தருணத்தில்
இருவருக்கும்
வெம்மைகூடி
கோடை நாட்களின்
காலத்தைச் சிறிது முன்கூட்டியது!

பின்பு வந்த கோடைநாட்கள்
நம் இருவருக்கும்
குளிர்காலமாகியது!

இலையுதிர் காலத்தில்
மனம் உதிராது
தொடர்ந்தது நம் உறவு!

பின்புக்கும் பின்பு வந்த
குளிர்காலத்தில்
அதே கோடைநாட்களை
அனுபவித்தபோது
ஆச்சர்யத்தில் நமக்கு
ஆசி கூறியது
எல்லாம் வல்ல இயற்கை!!

No comments: