Saturday, February 21, 2015

மறதி - நாகூர் தீன்

இறைவன் கொடுத்த வரம்
அவமானங்களின் சமாதி
துன்பம் துறக்கும் திறவுகோல்.

மறதி ஒரு தாலாட்டு
முகாரி ராகத்தின் முற்றுப் புள்ளி

மறதியின் பிரதியில்கூட
தோல்விகள் ஜெயிக்கும்
காயங்கள் மாயமாகும்…

இன்று —
மறக்கத் தெரிந்தவனுக்குத்தான்
ஜெயிக்கத் தெரிந்திருக்கிறது!
அஸ்தமிக்கும் சூரியனில்தானே
வெளிச்சம் பிறக்கிறது?

மறதியின் மடியில்தான்
துக்கம் தூரமாகி
தூக்கம் பிறக்கிறது

மனிதம் இல்லாத .
மனிதர்களைக்கூட
மறதி மன்னிக்கிறது…
மனிதனே
மறக்கப் பழகிக் கொள்!

எதை மறந்தாலும் சரி
மறதி மட்டும்
உன் ஞாபகத்தில் இருக்கட்டும்!

ஆக்கம் நாகூர் தீன் அவர்கள்

No comments: