Wednesday, September 4, 2013

பிரமாண்டமான கல்யாண நிகழ்வு

இலங்கையில் கடந்த வாரம் ஒரு பிரமாண்டமான கல்யாண நிகழ்வு, இலங்கை காவல்துறையால் (Police) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கை போன்ற அதி தூய தேசத்தில் எந்தவொரு குற்றச் செயல்களோ, வன்முறைகளோ, விபத்துக்களோ, கொள்ளையோ, கொலையோ எதுவுமே நடைபெறாமல் இருப்பது இலங்கைக் காவல்துறைக்கு அலுப்பூட்டக் கூடியதாக அமைந்திருக்கக் கூடும். எனவே அவர்கள் நேரத்தைக் கடத்துவதற்காக அல்லது தமது பொழுதைப் போக்குவதற்காக, கூட இருக்கும் நாய்களையெல்லாம் பிடித்து, மிக ஆடம்பரமாகவும், வெகுவிமரிசையாகவும் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.


இலங்கையில் இதுவரை இம் மாதிரியான விலங்குத் திருமணங்கள் இடம்பெறவில்லை என்ற குறை மாத்திரம்தான் இருந்தது. காவல்துறையின் புண்ணியத்தால் இப்பொழுது அதுவும் நீங்கிவிட்டது.

உங்கள் செல்லப் பிராணிகளையும் இனிமேல் காவல்துறையின் கண்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அடுத்த திருமணத்துக்காக அவர்கள் கடத்திச் செல்லக் கூடும் !


இனி புகைப்படங்களைப் பாருங்கள்.. லொள்

தகவல் தந்த M.Rishan Shareef
  அவர்களுக்கு  நன்றி 

No comments: