Saturday, October 24, 2009

பழகலாம் வாங்க.....

எனக்கு அரபு நபருடன் பழக்கமிருக்கிறது . எனக்கு அரசியல் வாதியுடன்
பழக்கமிருக்கிறது .
இப்படி பலர் அல்லது சிலர் கூற நாம் கேட்டிருக்கலாம் அல்லது நாமே
சிலரிடம் கூறியிருக்கலாம்.
பல மனிதர்களுடன் பழகும் வாய்ப்பை நாம் பெற்றிருக்கிறோம் .அந்த பழக்கம்
நட்பாக காதலாக மாறலாம் நட்பிற்கு நாடோ மொழியோ நிறமோ இனமோ தடையில்லை . ஆத்மார்தமான அன்பு மட்டுமே போதுமானது.
சிலருடன் நாம் பழகும் போது அவர்களுடைய பழக்கத்திற்கு நம்மை அழைத்து
செல்வார்கள் .அல்லது நம்முடைய பழக்கத்திற்கு நாம் ஈட்டுச் செல்வோம் . இது அவரவரின்
மன வலிமையை பொருத்தே நிகழ்கிறது.

பழக்க வழக்கத்தினால் ஒரு மனிதன் முன்னேற்ற மடையவும் முடியும்
தாழ்வு நிலைக்கு செல்லவும் முடியும்.

பெற்றோர்களின் வளர்ப்பில் குழந்தைகள் மனதில் முதன் முதலில்
பழக்கம் பதிவாகிறது. இந்த பதிவு குழந்தைகளின் வளர்ச்சியில் சிறுவனாகி வாலிபனாகி வயதாகும் வரையில் பதிவான பழக்கம் முழுமையாய் மாற்றமடைவதில்லை . அதனால் தான் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை சொல்லி தர வேண்டும் என்பார்கள்.

வளரக்கூடிய சூழ்நிலையில் வாழக்கூடிய சூழ்நிலையிலும் எத்தனையோ
மாற்றங்கள் பழக்கத்தினால் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது.

தீய பழக்க வழக்கங்களை கொண்டவர்கள் அவர்கள் மட்டுமே பாதிக்கப்படுவதில்லை அவர்களைச் சார்ந்திருக்க கூடிய அனைவரும் பாதிக்கப் படுகிறார்கள்.

நல்ல பழக்கத்தினால் ஒரு குடும்பம் சந்தோசமாக வாழ நூரு சதவீதம் வாய்ப்பிருக்கிறது.

நல்ல பழக்க வழக்கங்கள் வருவதற்கு கஷ்டமாக இருக்கலாம் ஆனால்
அவற்றோடு வாழ்வது சுலபமே ஆகும். தீய பழக்க வழக்கங்கள் சுலபமாக வருவதாக இருக்கலாம் ஆனால் அவற்றோடு வாழ்வது கடினமாகும் .என்கிறார் ஒரு ஆய்வாளர்.

நம்மை விட உயர்தவர்களோடு பழகுவதற்கு எப்போதும் முயற்சி செய்ய வேண்டும். அந்த பழக்கம் நம்மை அவர்களவிற்கு சமமாக உயரச் செய்யும்.

நம் பழக்கத்தை விட குறைந்தவர்களோடு நாம் பழகிக் கொண்டிருந்தால்
அவர்களுடைய குணதிசயங்கள் நம்மில் தொற்றிக்கொள்ள நிறைய்ய வாய்ப்பிருக்கிறது .பின் நாமும்அவர்களைப் போலாகி விடுவோம்.

அது மட்டுமல்ல தாழ்வு மனப்பான்னை உடையவரோடு நாம் பழகினால்
நம்மால் எதையும் சாதிக்க முடியாது எதிலும் வெற்றி பெற முடியாது . நமக்கும் தாழ்வு மனப்பான்மை உண்டாகி விடும்.

தாழ்வு மனப்பான்மையுடைய நண்பர்களை பெற்றவர்கள் அவர்களை நீங்கள் மாற்றிவிடுங்கள் இல்லை யெனில் நீங்கள் மாறிவிடுவீர்கள் .

நமது முன்னேற்றதிற்கு நம் பழக்க வழக்கங்கள் முக்கிய பங்கு
வகிக்கிறது என்பதை மறந்திடக்கூடாது . கவனமாயிருக்க வேண்டும்.



தீய பழக்க வழக்கத்தை கொண்டவரோடு நட்பு வைத்துக் கொள்வதை விட நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம்.அவர் திருந்தாத வரையில்.


நம்மோடு பழகும் நம் நண்பர்களின் பழக்க வழக்கங்களை நாம்

கூர்ந்து கவனிக்கதான் வேண்டும். அவர்களின் தீய பழக்கத்தினால் நமது முன்னேற்றம் எந்த விதத்திலும் தடைப்படக் கூடாது.


சில தீய பழக்கம் உடம்பை கெடுக்கும் சில பழக்கம் மனதை கெடுக்கும் அதனால் உறவுகள் இடையே விரிசல் கொடுக்கும்.


நமது நடத்தை பெரும்பாலும் பழக்கமே யாகும் . இவை நாம் சிந்திக்காமலேயே தானாகவே வந்து விடுகின்றன. பண்பு என்பது நமது பழக்க வழக்கங்களின் மொத்தத் தொகையாகும். நல்ல வித பழக்க வழக்கங்களுடன் ஒருவர் இருந்தால் அவர் நல்லவிதப் பண்பு உடையவர் என்று கருதப்படுகிறார்.


எதிர் மறைப் பழக்க வழக்கங்களை எதிர் மறை பண்புடையவர் ஆகிறார்.பழக்க வழக்கங்கள் தர்க்கத்தையும் பகுத்தறிவையும் விடவும் மிகப் பலமானவை .
தொடக்கத்தில் பழக்க வழக்கங்கள் நம்மால் அறிந்துக் கொள்ள முடியாத அளவிற்கு மிக பலவீனமாக இருக்கும் இறுதியில் அவற்றிலிருந்து வெளிவர முடியாத அளவிற்கு மிகப் பலமானவையாகி விடும் . பழக்க வழக்கங்களைத் தன்னிச்சையாகவோ அல்லது மன உறுதியானாலோ வளர்த்துக் கொள்ளலாம்.

நான்சிறுவனாக இருந்த போது எனது பெற்றோர்கள் நீ நல்ல பழக்க வழக்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் ஏனென்றால் பழக்க வழக்கங்களே பண்பை உருவாக்குகின்றன. என்று என்னிடம் சொன்னது நினைவுக்கு வருகிறது என்கிறார் ஷிவ்கெரா.


ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவரின் நல்ல பழக்க வழக்கத்தினால் அந்த கம்பெனி அவர் மீது நம்பிக்கை வைக்கிறது அதனால் அவருக்கு உயர் பதவியை அது சம்பாதித்து தருகிறது. நல்ல நண்பர்களை தேடி தருகிறது. பலர் நம்மிடம் பழகுவதற்கு ஆர்வப்படுவார்கள்.நல்ல சிந்தனையாள்களுடன் பழகும் போது நமக்கும் நல்ல சிந்தனைகள் மலரும்.


நல்ல பழக்க வழக்கங்களை கொண்ட சிலர் சில சந்தர்பங்களில் தீய பழக்கத்திற்கு மாறிவிடுவதுண்டு இதற்கு பல வித காரணங்கள் கூறுவார்கள் இவர்களின் வாழ்க்கையில் ஏதோ ஒரு நிகழ்ச்சி மனதில் பாதிப்பை உண்டாக்கியிருக்கலாம் இதிலிருந்து மீள்வதற்கு இவர்களின் நண்பர்கள் உதவி செய்ய முன் வர வேண்டும் இது இவர்களின் மீது கடமையாகும்.
ஓரு பழக்கத்தை வளர்ப்பது என்பது நிலத்தை உழுவது போன்றதாகும்.
நல்ல பழக்கத்தை வளர்ப்பது ஒரு பூந்தோட்டத்தை உருவாக்குவது போலாகும்.

எதையும் அறிவுரைகள் என்று நாம் கருதவும் கூடாது அதை ஒதுக்கவும் கூடாது இவைகள் யாவும் நமது அனுபவத்தின் பிரதிலிப்பு. 


கிளியனூர் இஸ்மத் 
நன்றி:source:www.kismath.blogspot.com

No comments: