Wednesday, April 5, 2017

400 மொழிகளில் அசத்தும் சிறுவன்!

படம் source
பல மொழிகள் பேசத் தெரிந்த பலருக்கும் பெரும்பாலும் அந்த மொழிகளை எழுதவோ, படிக்கவோ தெரியாது. ஆனால், பத்து வயது மஹ்மூத் அக்ரம் 400 மொழிகளில் படிக்கிறார், எழுதுகிறார், தட்டச்சு செய்கிறார்! அறிவுத் திறனில் உலகின் மிகப் பெரிய பணக்காரரான பில்கேட்ஸுக்கு இணையாகத் திகழ்கிறார்! இந்தச் சிறுவன் பல்வேறு விருதுகளையும் வென்றிருக்கிறார்!

சென்னை வியாசர்பாடியில் வசிக்கும் அக்ரம், நான்கு வயதிலேயே மொழிகளைக் கற்கத் தொடங்கிவிட்டார். இவரது அப்பா அப்துல் ஹமீத் பல மொழிகள் அறிந்தவர். இவர் பிற மொழிகளில் தட்டச்சு செய்வதைப் பார்த்து, இந்தச் சிறுவனும் மிக வேகமாகக் கற்றுக்கொண்டிருக்கிறார். ஆச்சரியப்பட்ட அப்பா, அடுத்தடுத்துப் புதிய மொழிகளைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். தமிழ் பிராமி, கிரந்த எழுத்து, வட்டெழுத்து போன்றவற்றை அந்த வயதிலேயே கற்றுவிட்டார் அக்ரம்.

ஒரு கட்டத்தில் கற்கும் திறனும் தட்டச்சுத் திறனும் அசாத்தியமான வேகத்துக்குச் சென்றன. அறிவாற்றல் திறன் பரிசோதனை செய்யப்பட்டபோது, `அக்ரம் இயல்பான குழந்தை இல்லை’ என்பதை பெற்றோர் புரிந்துகொண்டனர். அறிவையும் நினைவாற்றலையும் வளர்க்க ஊக்கப்படுத்தினர்.
மேலும் படிக்க கீழ் உள்ளதை சொடுக்குங்கள்
400 மொழிகளில் அசத்தும் சிறுவன்!

No comments: