Thursday, April 13, 2017

அடுக்கடுக்காய் அடுக்கடுக்காய்

அடுக்கடுக்காய் அடுக்கடுக்காய்
மேலும் மேலும்
இத்தனைச் சோதனைகளா

என்றால்
ஏதோ மிக நல்லதொன்று
உங்கள் வாழ்வில்
வெகு விரைவில் மலரப் போகிறது



கரி
மேலும் கருகிக் கருகி
இறுகுவது
வைரமாவதற்குத்தான்

உங்கள் வழமையான
அன்பிலும் பண்பிலும்
நயாகராவாகவே
இருங்கள்

வந்து குவியும் துக்கங்களை
வந்த நொடியே
காலைக் கடன்போல
வெளியேற்றிக்கொண்டே
இருங்கள்

ஏறும் துன்பம்
எதுவென்றாலும்
இறங்குவதே இல்லை
அதைச்
சுமந்து கொண்டே
நின்றால்

உங்களை
உண்மையிலேயே
உயிரில் வைத்து நேசிப்பவர்கள்
யார் யார் என்பதை
இம்மாதிரியான நேரத்தில்
கணக்கெடுத்துக்கொண்டே
இருங்கள்

பகட்டுகளையும்
ஏமாற்று வித்தைகளையும்
அடையாளப்படுத்திக்கொண்டே
இருங்கள்

இறைவன் உங்களை
அடுத்ததோர் உயர் நிலைக்குத்
தயார் செய்கிறான்

வெற்றி பெறுங்கள்
வாழ்த்துக்கள்

அன்புடன் புகாரி
https://anbudanbuhari.blogspot.in

No comments: