Thursday, December 22, 2016

யா அல்லாஹ் ....!

ராஜா வாவுபிள்ளை
பழிபாவம் அறியா
பவித்திர பாலகனாய்
பிறப்பித்து வாழ்ந்திடவே
வழி செய்தாய் யாஅல்லாஹ் !
வளர்ந்து ஆளாகி
பாவங்கள் பலசெய்து
சுமைகளாய் தோளில்
ஏற்றியதை இறக்கிடுவாய் யாஅல்லாஹ் !
பழிக்கு அஞ்சாத
பாவிகள் மத்தியில்
உந்தன் பாதம் பார்த்து
நடந்திட அருள்வாயே யாஅல்லாஹ் !
புண்ணியங்கள் இருக்க
பாவத்தை கையேந்தாமல்
புனிதமாய் வாழ்ந்திடவே
நல்வழி காட்டிடுவாயே யாஅல்லாஹ் !
உனது கட்டளைகளை
சிரமேற் கொண்டு
சிரத்தையாய் செய்திடவே
சிந்தையை செப்பனிட்டு தருவாயே யாஅல்லாஹ் !

வாழ்வு தந்தாய்
வாழும்கலை சொல்லித் தந்தாய்
நல்நெறி வழுவா
நடப்பினை தருவாயே யாஅல்லாஹ் !
மரணத்தை எழுதிவிட்டாய்
எழுதியதை எதிர்கொண்டு
எம்பெருமான் வழிசென்று
உன்னடி சேர்ந்திடவே
ஏகனே கருணை கட்டிடுவாயே யாஅல்லாஹ் !

ராஜா வாவுபிள்ளை

No comments: