Thursday, May 5, 2016

படிச்சு என்ன செய்யப்போறே?

படிச்சு என்ன செய்யப்போறே?
டாக்டராகணும், கலெக்டராகணும்.
இப்படி குழந்தைகள் சொன்னா நாம பெருமைப்படறோம். அதையே உசுப்பி உசுப்பி குழந்தைகள் மனசில் விதைச்சுடறோம்.
டாக்டராகறதும் கலெக்டராகறதுமே முக்கியம் இல்லை. நல்ல மனிதர்கள் ஆகணும். அதை குழந்தைகளுக்கு சொல்ல முடியாவிட்டாலும் டாக்டருக்குப் படிச்சே ஆகணும், கலெக்டருக்குப் படிச்சே ஆகணும்னு விதைக்க வேண்டாமே... உலகில் எல்லாரும் டாக்டர்கள் ஆகிவிட முடியாது. தேவையும் இல்லை. டாக்டர் படிப்புதான் உலகிலேயே சிறந்த படிப்போ அல்லது டாக்டர்கள்தான் உலகில் உன்னத மனிதர்களோ இல்லை. அதுவும் ஒரு படிப்பு, அவ்வளவுதான்.
ஒரு துறையில் ஆர்வம் இருந்தால் அதில் முனைப்புக் காட்ட வேண்டும்தான். அதே சமயத்தில் மாற்றாக வேறொரு துறையையும் தேர்வு செய்ய, மனதளவில் தயார் செய்து கொள்ள குழந்தைகளுக்கு நாம்தான் கற்றுக் கொடுக்க வேண்டும்.
சொல்லணும்னு தோணிச்சு.

Shahjahan R
(புதியவன் )

No comments: