Wednesday, March 4, 2015

என்னத்தைத்தான் விட்டுக்கொடுத்தாலும்

என்னத்தைத்தான் விட்டுக்கொடுத்தாலும்
பங்காளிக்கு மட்டும் ஏன் யானைப்பசி ?
தின்பதற்கு ஒன்றுமில்லையா ?
யானைப்பசிக்கு ஏன் சோளப்பொறி ?
கரும்புக்காட்டையெல்லம் அழித்துவிட்டும் ,
ஏன் இன்னும் அகோரத்தாண்டவம் ?
மூளை மந்தித்ததோ ?
மரத்துப்போனதோ -இல்லை
மறந்துப்போனதோ !-இல்லை
மதம் பிடித்தலைகிறதோ ?

போதை தலைக்கேறிய ..
குரங்கு கையின் பூமாலையாய் ..
உதிர்த்தெரியப்பட்டது யாரால் ?...
உறவுகள் உடைத்தெறியப்பட்டது யாரால் ?...

மழைநீரில் அலைகழிக்கப்பட்ட
காகிதப் படகை ....கரைசேர்க்க ..மறுத்து ..
தனி சொகுசு கொண்டாடி களித்தது யாராம் ?..
பின் ,தனித்துப்போனதும் யாராம் ?..

எதைக் கொண்டுவந்தோம் கொண்டுபோக ?..
எதைத் தின்று தீர்ப்போம் பித்தம்தீர ?
கையில் அமானிதங்களை வைத்துக்கொண்டு ..
அமானிதங்களுக்கு அலைவது பெரும் பாவமய்யா !...



No comments: