Wednesday, December 31, 2014

"நிஷா வந்திருக்காரே..." / 'நேசம்' கவிதையுடன்

கவிஞர் தேவமகள் நினைவு இலக்கிய விருது 2000 வருட இளம் கவிஞருக்காக எனக்கு வழங்கப்பட்டது...
அதற்குப் பிறகு நான் கவிதை இலக்கியப் பங்களிப்பிலிருந்து முழுமையாக விலகி முழுக்க முழுக்க தொழிலில்
முனைப்பு காட்டினேன்....

அந்தக் கவிதை
********************
நேசம் -நிஷா

காரோடும் சாலைநடுவே
விபரீதமறியாமல்
அமர்ந்திருந்த பறவை
சக்கரம் நசுக்கத்துடிக்கும்
கடைசி நொடிவரை
பறப்பதைப் பார்க்கவில்லை..

சற்றே திரும்பி சாலையைப் பார்த்தால்
உடைந்த சிறகுகளும்
ரத்தத்தடயமும் இருக்குமோவெனும்
பயத்தில்
மனதில் உருவாக்கிக் கொண்டேன்.......
பறவை பறக்கும் காட்சியை...!!
 

No comments: