படத்தில் நீங்கள் பார்ப்பவர் ஒரு அமெரிக்க முஸ்லிம் பெண். அவர் பெயர் தாஹிரா அஹமது. இவர் அமெரிக்காவிலுள்ள Northwestern University இல் Associate chaplain ஆக பணியிலிருக்கிறார். அமெரிக்கா மட்டுமன்றி ஆப்கானிஸ்தான், பாலஸ்தீன், இஸ்ரேல் போன்ற நாடுகளில் ஏற்படும் இனக் கலவரங்களின் போது இருதரப்பினருக்கும் இடையே அமைதி ஏற்பட பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றிருக்கிறார். இவரின் மனித நேயம் மிக்க சேவைகளைப் பாராட்டி, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வெள்ளை மாளிகையில் விருந்தளித்து "அமெரிக்காவின் மிகச் சிறந்த பெண்களில் ஒருவர்" என்று பெருமைபடுத்தியிருக்கிறார்.
சரி, இப்ப என்ன அதுக்கு???? அதானே.....
இவர் கடந்த மே மாதம் 29ம் தேதி,பாலஸ்தீன மற்றும் இஸ்ரேல் இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தணிக்கும் பொருட்டு பேச்சுவாத்தைக்காக வாஷிங்டன் நகருக்குப் புறப்படுகிறார்.
Showing posts with label மனித நேயம். Show all posts
Showing posts with label மனித நேயம். Show all posts
Monday, June 1, 2015
Wednesday, May 7, 2014
எழுதி !எழுதி !!
பாரமிருக்காது என்று நினைத்துத்தான்
ஒவ்வொரு சுமைகளையும் தூக்குகின்றேன்
வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை !
வாழ்க்கையின் தத்துவம் படிப்பினையாகமாறிப் போகின்றது .
தூசுகள் பறக்கின்ற புழுதி மண்ணில் நின்று
தலைக்கணத்தின் -
பெருமைகள் புகழ் பாடுகின்றன .
மனித நேயத்தை புதைத்து விட்டு
பொறாமை உணர்வுகள்
தங்கள் கண்களை தாமே மறைத்துக் கொண்டு விழிகளை தடவுகின்றன
ஒவ்வொரு சுமைகளையும் தூக்குகின்றேன்
வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை !
வாழ்க்கையின் தத்துவம் படிப்பினையாகமாறிப் போகின்றது .
தூசுகள் பறக்கின்ற புழுதி மண்ணில் நின்று
தலைக்கணத்தின் -
பெருமைகள் புகழ் பாடுகின்றன .
மனித நேயத்தை புதைத்து விட்டு
பொறாமை உணர்வுகள்
தங்கள் கண்களை தாமே மறைத்துக் கொண்டு விழிகளை தடவுகின்றன
Friday, November 29, 2013
எல்லைகள் கடந்த மனித நேயம்
இந்த பூமியின் இயற்கை முழுவதும் ஏதோ ஒரு அழகிய வகையில் இணைந்தே கிடக்கிறது. கால் நனைக்கும் கடலின் முதல் துளியையும் உலகின் மறுகோடியில் கிடக்கும் கடைசித் துளியையும் ஏதோ ஒரு ஈர இழை தான் இணைத்துக் கட்டுகிறது. உலகின் ஒரு துருவத்தையும், மறு துருவத்தையும் காற்றின் ஏதோ ஓர் கயிறு தான் இறுக்கிக் கட்டுகிறது. நம் தலைக்கு மேல் விரியும் வானமும் தேசங்களுக்கு மேல் கரம்கோத்தே கிடக்கிறது. பிரிந்தே இருந்தாலும், இணைந்தே இருக்கும் வித்தை கற்றிருக்கிறது இயற்கை. ஆனால் மனிதர்களோ இணைந்தே இருந்தாலும் மனதால் பிரிந்தே இருக்கிறார்கள் !
மனிதர்களும் பிரிந்தே இருந்தாலும் இணைந்தே இருக்கும் வல்லமை பெற்றிருந்தால் வாழ்க்கை அர்த்தப்படும். அந்தப் பிணைப்பை நல்கும் ஒரே ஒரு ஆயுதம் அன்பு தான் ! ஒரு இதயத்தில் ஊற்றெடுக்கும் அன்பு, மற்ற இதயங்களுக்குள் சாரலடித்துச் சிரிக்கும் போது மனித வாழ்க்கை அழகாகிறது. ஆனால் அந்த ஊற்றை உள்ளுக்குள்ளேயே புதைத்து வைக்கும் போது சுயநலச் சுருக்குப் பைகளாய் மனித வாழ்க்கை சுருங்கி விடுகிறது !
Wednesday, February 6, 2013
வேண்டும் வேண்டும் மனித நேயம் by சேவியர்.
Prof. Dr. John Lee அவர்கள் தயாரித்த "UNITY in INDIA" ஆல்பத்துக்காக Joseph Xavier Dasaian எழுதிய பாடல்..
வேண்டும் வேண்டும்
மனித நேயம்
நெஞ்சில் கொண்டால்
வாழும் தேசம்
வேண்டும் வேண்டும்
மனித நேயம்
மனிதம் மனிதம்
நமது கீதம்
உண்பது நம் உயிர்வரை செல்லும்
பண்பது நம் உயர்வினைச் சொல்லும்
அன்பது இவ் உலகினை வெல்லுமே
ஃ
அறியா மையினை
அழிக்கும் மழையாய்
அறிவிங்கே பொழியட்டுமே
கல்விப் பயிர்கள்
தேசம் முழுதும்
செழித்திங்கே வளரட்டுமே
கல்லாத ஆளில்லை என் றிங்கே ஆகட்டும்
சொல்லாமல் சோகங்கள் சாயட்டுமே
தேசத்தின் தேகத்தில் நேசங்கள் பாயட்டும்
அன்போடு கல்வியும் பூக்கட்டுமே
இணைவோம் கரம்தொடு
அறிவின் வரம் கொடு
இனிய இந்தியா இனியென்றும் ஒளிவிடுமே
வேண்டும் வேண்டும்
மனித நேயம்
நெஞ்சில் கொண்டால்
வாழும் தேசம்
வேண்டும் வேண்டும்
மனித நேயம்
மனிதம் மனிதம்
நமது கீதம்
உண்பது நம் உயிர்வரை செல்லும்
பண்பது நம் உயர்வினைச் சொல்லும்
அன்பது இவ் உலகினை வெல்லுமே
ஃ
அறியா மையினை
அழிக்கும் மழையாய்
அறிவிங்கே பொழியட்டுமே
கல்விப் பயிர்கள்
தேசம் முழுதும்
செழித்திங்கே வளரட்டுமே
கல்லாத ஆளில்லை என் றிங்கே ஆகட்டும்
சொல்லாமல் சோகங்கள் சாயட்டுமே
தேசத்தின் தேகத்தில் நேசங்கள் பாயட்டும்
அன்போடு கல்வியும் பூக்கட்டுமே
இணைவோம் கரம்தொடு
அறிவின் வரம் கொடு
இனிய இந்தியா இனியென்றும் ஒளிவிடுமே
Subscribe to:
Posts (Atom)


