Showing posts with label பேசுவது. Show all posts
Showing posts with label பேசுவது. Show all posts

Wednesday, September 12, 2012

பேசாமல் இருந்தால் நாம் நம் நிலை அறியோம்!


இறைவன் மானிடருக்கு கொடுத்த தனிப் பெரும் கருணை பேசுவதும் மற்றும் சிந்திப்பதும் .

ஒலி எழுப்புவத்தின்   வழியாக மற்ற இனங்களும் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றன.ஆனால் அவைகளுக்கு நம்மைப்  போல் சிறப்பான பேசும் ஆற்றலும்,  சிந்திக்கும்    திறனும்  கிடையாது .
நாம்  பேசுவதால்  நன்மையும்  தீமையும்  விளைகின்றது. அதனால் நாம் பேசும்போது கவனத்துடன் பேச வேண்டும்.
சிலர் மௌனமாக இருப்பதையே விரும்புவார்கள் . இறைவன் தந்த பேசும் ஆற்றலையும் மற்றும் சிந்திக்கும் திறனையும் முறையாக பயன்படுத்த வேண்டியது நம் கடமை

உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்!
 "நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்."
-திருக்குர்ஆன் 2:42