Saturday, April 24, 2021

இரவு ஊரடங்குன்னு சொன்னாங்க...

 இரவு ஊரடங்குன்னு

சொன்னாங்க...

உச் கொட்டி விட்டு அமைதியாகிட்டேன்...

கேளிக்கைகள் இல்லைன்னாங்க...

பணப்புழக்கம் குறையுமேன்னு

நினைச்சிட்டு விட்டுட்டேன்...

ஞாயிறு ஊரடங்குன்னு சொன்னாங்க...

நோன்புக்காலத்துல

எங்க போகப் போறோம்னு

சமாதானப்படுத்திக்கிட்டேன்...

பள்ளியில் கஞ்சி

ஊத்த மாட்டாங்கன்னு

சொன்னாங்க...

சின்னதா மனசுக்குள்ள

கவலை வந்தது...

இனி பள்ளியில்

தொழுகையே இல்லைங்கறாங்க...

நிஜமா தாங்க முடியாமல்

கதறி அழுதுட்டேன்...

முடியல...

தாங்க முடியல...

அடுத்தது...?! ?! ?!


Suhaina Mazhar

No comments: