Saturday, April 24, 2021

💞 இறைசிந்தனை பிறை 🌙 9 ஒன்பது என்பதிலே எத்தனை அற்புதம்!

 


Noor Saffiya

💞  இறைசிந்தனை

      பிறை 🌙 9

ஒன்பது என்பதிலே

எத்தனை அற்புதம்!

ஒவ்வொரு விதத்திலே

எடுத்து காட்டுகிறான்!

நவக்கிரகங்களிலும்

ஒன்பதாக்கினான்!

நவ தானியத்திலும்

ஒரு அமைப்பாக்க்கினான்!

 பாரதி கவி நயத்தில்

ஒன்பது குணபாவமே!

பரத நாட்டியத்திலே

ஒன்பது நவரசங்களே!

புனித ஹஜ்ஜின் அரஃபா

நாள் பிறை 9

படைத்தோமன் தந்த

படைத்த உடலில் வாசல் 9

மூஸா நபியினிலே

முஃஜிஜாத் _ 9

முன்னோன் கர்பத்தில்

முழுமைபடுத்துவது 9

ரமழானின் பிறை 9

ரப்பு நம்மினிலே!

ராஹத்தாய் பிடிக்க

வைத்தவனுக்கு நன்றி!

ரமழானின் பொருட்டால்

ரஹ்மத்தை சொரிவான்!

ரஹ்மத்தோடு நம்மில்

பரக்கத் நிறைப்பான்!

பரக்கத்தோடு நம்மில்

நிஃமத் ஆக்குவான்!

நிஃமத்தோடு நம்மில்

நிம்மதியோடு நாயனுக்கு!

அல்ஹம்துலில்லாஹ்!

அஸ்ஸுக்ரன்லில்லாஹ்!

அழகாய் மொழிந்து!

அள்ளி அள்ளி வழங்கி

அஹ்மதர் இஷ்கிலே!

அகமகிழ உளம்குளிர!

ஆரோக்ய வாழ்வுடனே!

அதிக அமல் செய்தே!

வாழ,ஆள,அனுபவிக்க!

வந்த ரமழானக்கியே!

பரந்திருக்கும் கொரோனோ!

பிரிந்து விரண்டோடி ஓட!

பாரெல்லாம் பார்க்கும்

முகம் யாவுமே!

பரவச மனம் கொண்டே!

பணப்புழக்கமாகியே!

பள்ளி,தொழில்,மற்றவை

செழித்து இயல்புநிலை!

இயங்கிட எல்லாம்

வல்லிறைவன்

அருட்கிருபை செய்வான்

         அழகிய ஹக் திக்ரும்

       அஹ்மதரின் ஸலவாத்

          துதித்து நாவினில்

              நனைவோம்.!

                    ஆமீன் !!

                யா  ரப்பே  !!

            என்  ஹுப்பே  !!

           ஸல்லல்லாஹு

        அலா முஹம்மத்

         ஸல்லல்லாஹ்

   அலைஹிவ ஸல்லம்💞

🖋நூர்ஷஃபியா காதிரியா

No comments: