Monday, April 19, 2021

💞 இறைசிந்தனை நோன்பின் மாண்பு!

Noor Saffiya

💞 இறைசிந்தனை

நோன்பின் மாண்பு!

நீரும்,பேரித்த கனியும்!

அல்லாஹ்வே நீர்!

அஹ்மதரே   கனி!

உயிரே  நீரானால்!

உடலே கனிதானே!

நீராதிக்கமோ!

நீதமானவனோ!

கனி வர்க்கமோ!

காருண்ய நபியோ!

நீரும்  கனியும்!

அருளும் ஆசியும்!

இறையும் மறையும்!

இரண்டும் ஒன்றாய்!

இறைநெருக்கம் பெற்று!

இடையூறுகள் நீங்கி!

அஞ்ஞானம் பெற்று!

அகமகிழ அறவழி

அடைவோம்! நாம்!

அறத்தின் கூர்மைக்கே

அழகிய ரமழான்!

அருளிய ரஹ்மத்தை

அள்ளிடுவோம் நாம்!

செய்யும் அமலினை

சுயமாய் செய்வோம்!

சாட்சிக்கான ஆயத்தம்

சிறப்பாய் செய்வோம்!

இறையச்சம் பேணவே

இம்மாதத்தினிலே!

செய்தானை கட்டிவிட்டு

சரிசெய்யும் மனதாக்கி!

சீர்செய்திடு! என்றே,

செம்மைவாழ்வை கூட்ட

செழிப்பான நாள் தந்தான்

செழிப்பு எல்லாம் தரவே!

நஃப்ஸின் நிலை அறிய

நமக்கு தந்ததே ரப்பு!

நம்மை நாம் எப்படி

நடந்து நாயனில் கலக்க!

நல்லதோர் பாடமே !

நல்ல முஃமீனாக்கவே!

நாவின் கட்டுபாட்டுக்குமே!

நாதரின் வாழ்வறிவதற்கே!

செய்வோம் அவனின்

கட்டளைக்கேற்ப!

செழிப்பாய் நாட்டிலே

செழுமை வாழ்வோடு!

எந்தவித நோயில்லாமலே!

நாடும்,மக்களும் செழித்து,

நல்லாட்சி மலர்ந்து 🌹!

நிம்மதியோடு வீட்டிலே

நிறைந்த இறைஅருளாய்!

நாதர் பரக்கத்தினாலே!

நல்லடியாராய் வாழ,ஆள

அனுபவிக்க எல்லாம்

வல்லிறைவன் அருட்கிருபை

செய்வான் ரமழானிலே!

அழகிய *ஹக்* திக்ரும்

அஹ்மதரின் *ஸலவாத்*

துதித்து நாவினில்

நனைவோம்..!!

              ஆமீன்..!

           யா  ரப்பே..!!

       என்  ஹுப்பே..!!

      ஸல்லல்லாஹு

      அலா முஹம்மத்

     ஸல்லல்லாஹு

  அலைஹி வஸல்லம்💞

🖋நூர்ஷஃபியா காதிரியா



No comments: