Thursday, April 22, 2021

ரப்பே!எந்த கருணையினால் அய்யூப் நபி அவர்களை நோயிலிருந்து காப்பாற்றினாயோ

 

*اللهم إني أسألك برحمتك*

*التي نجيت بها عبدك أيوب،*

*وتبت بها على أبينا آدم،*

*ونصرت بها موسى وهارون؛*

*أن تفرج همي، وتقضي ديني،*

*وتغفر خطيئتي، وتدخلني الجنة.*

அல்ஹம்துலில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மாதனா இலைஹிந்நுஷூர்..

புனித ரமளானில் நோன்பு நோற்க வாய்ப்பளித்த வல்லோனே உனக்கே புகழனைத்தும்

யாஅல்லாஹ்!


ஆதம் நபியின் பாவமன்னிப்பை ஏற்றுக்கொண்டாயோ

மூஸாநபிக்கும், ஹாரூன் நபிக்கும் உதவிசெய்தாயோ

அந்த கருணையினால் எங்களின் துக்கத்தை மகிழ்ச்சியாக ஆக்குவாயாக!

எங்களின் கடன்களை நிறைவேற்றுவாயாக!

எங்களின் பாவங்களை மன்னிப்பாயாக!

எங்களை சொர்க்கத்தில நுழையச் செய்வாயாக!

ரப்பே!

எங்களுக்கு உதவி செய்வாயாக!

எங்களுக்கு எதிராக யாருக்கும் உதவி செய்துவிடாதே!

எங்களுக்கு வெற்றியைக் கொடுப்பாயாக!

எங்களுக்கு எதிராக யாருக்கும் வெற்றியைக் கொடுத்துவிடாதே!

எங்களுக்கு நேர்வழியைக்காட்டுவாயாக!

அதை எங்களுக்கு லேசாகாவும் ஆக்குவாயாக!

உன்னையே அதிகம் திக்ரு செய்பவர்களாக,

உனக்கு அதிகம் நன்றி செலுத்துபவர்களாக!

உன்னையையே அதிகம் அஞ்சுபவர்களாக

உனது வழியிலேயே நடப்பவர்களாக

உனக்கு மட்டுமே வழிப்பட்டு நடப்பவர்களாக,

எங்களை ஆக்குவாயாக!

எங்களின் தலைவர் அண்ணல் நபி அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் உன் அருளைப் பொழிவாயாக

ஆமீன் .

வல்ஹம்துலில்லாஹி ரப்பில்ஆலமீன்...

No comments: