Monday, November 21, 2016

உண்மையின் திண்டாட்டம் ...!

சுகம் ஒருபுறம்
துக்கம் மறுபுறம்
இரண்டிற்கும் இடையே
சுழலும் வாழ்க்கை ...!
உழைப்பு ஒருபுறம்
சுரண்டல் மறுபுறம்
இரண்டிற்கும் இடையே
வளர்சியின் வேடிக்கை ...!

உறவு ஒருபுறம்
நட்பு மறுபுறம்
இரண்டிற்கும் இடையே
பாலமாய் மனிதம் ...!
வலிகள் ஒருபுறம்
வளர்ச்சி மறுபுறம்
இரண்டிற்கும் இடையே
முயற்சியின் முன்னேற்றம் ...!
நீ ஒருபுறம்
நான் மறுபுறம்
இரண்டிற்கும் இடையே
நம்மின் ஈர்ப்பு ...!
மனிதம் ஒருபுறம்
புனிதம் மறுபுறம்
இரண்டிற்கும் இடையே
ஞானத்தின் தேடல் ...!
வீழ்வது ஒருபுறம்
எழுவது மறுபுறம்
இரண்டிற்கும் இடையே
தொடர்வது தன்னம்பிக்கை ...!
இடம் ஒருபுறம்
வலம் மறுபுறம்
இரண்டிற்கும் இடையே
நேர்மையின் நிலைப்பாடு ...!

ராஜா வாவுபிள்ளை

No comments: