Friday, November 11, 2016

வாழ்வெனும் அமைதிக் கடல்....!

எல்லை இல்லா
எண்ணங்கள்
பாதை இல்லா
பயணங்கள்
இலக்கு இல்லா
செயல்கள்
பரிதவிக்கும் பாசப்
பிணைப்புகள்

பச்சாதாபம் தேடும்
பரிதாபங்கள்
பொறுமை இல்லா
அவசரங்கள்
அருமை இல்லா
அனுசரணைகள்
எட்டாக்கனிக்கு ஏங்கும்
தாழ்வாரங்கள்
எதிர்பார்த்து காத்திருக்கும்
பெருந்தவிப்புகள்
அலைச்சல்களில் அலைக்கழியும்
பேராசைகள்
அத்தனைக்கும் வேண்டும்
எல்லைக்கல்
பொறுமைக்கல்
போட்டு தடுத்தால்
அதுவே வாழ்வெனும்
அமைதிக் கடல்.


ராஜா வாவுபிள்ளை

No comments: