Saturday, August 22, 2015

அனுபவப் பாடம்

அறிந்திருக்க வேணும்
அதிலுள்ள தெளிவு
ஆத்மார்த்த அறிவு


புதுமையாய் பலவும்
புரியத்தரும் பாடம்
பூப்போன்று உலகில்
பழகச்சொல்லும் பாடம்

பொறுமையை நமக்கு
புகட்டிடும் பாடம்
பொல்லாதவை விட்டு
புறம்தள்ளும் பாடம்

வெறுமைகள் யாவும்
விலக்கிடும் பாடம்
விதியையும் வெல்ல
விளக்கம்தரும் பாடம்

தருமத்தை என்றும்
தாங்கிவரும் பாடம்
தரணியர் போற்ற
தரம்மிக்க பாடம்

வாழ்க்கையில் நமக்கு
வழிகாட்டும் பாடம்
வானுயர வளர
வகைசெய்யும் பாடம்

சாதனைபடைக்க
போதனைதரும் பாடம்
சோதனை வருமுன்
சொல்லிவிடும் பாடம்

அகிலத்தைத் தேடி
அதற்கில்லை கூலி
இனம்காணு கோடி
இதற்கில்லை வேலி

அனுபவப் பாடம்
அகம் உணர்ந்த வேதம்
புரிந்தவர் வாழ்வில்
புண்ணியம் தரும் பாடம்


அதிரை மெய்சா
http://adiraimysha.blogspot.in/

No comments: