Showing posts with label மொழி. Show all posts
Showing posts with label மொழி. Show all posts

Tuesday, September 8, 2015

உகண்டாவில் எனது வீட்டு வாத்தியார் ....!

உகண்டாவில் எனது வீட்டு வாத்தியார் ....!

கற்றுத்தருபவர் அனைவரும் ஆசிரியரே.

எனக்கு சொகிலி மற்றும் லுவோ எனும் கிழக்கு ஆப்ரிக்க மொழிககளை கற்றுத்தவர் கொமகேச் என்பவர்.

அவர் நாங்கள் எண்பதுகளில் கம்பாலாவில் வசித்துவந்த வீட்டின் காவல்காரராக வேலைசெய்து வந்தார்.

அப்போது உகாண்டாவில் உள்நாட்டு போர் நடந்து வந்ததால் மாலை 5 மணியிலிருந்து காலைவரை ஊரடங்கு சட்டமும் கண்டதும் சுடவும் உத்தரவு அமலில் இருந்தது.

Sunday, April 13, 2014

மொழி வெவ்வேறு மதத்தவரை ஒன்றிணைக்கும் !

முன்னொரு காலத்தில் புதுக்கோட்டை நகரில் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக்கொண்ட ஆங்கிலோ இந்தியன் சமூகத்தைச் சேர்ந்த பல குடும்பங்கள் வசித்து வந்தன. இப்போது யாரும் இல்லை. அந்த சமூகக் குடும்பங்களில் ஒருவர் திருமதி.இமாகுலேட். கணவனை இழந்த சுமார் 50 வயதான, பிள்ளைகள் இல்லாத அவர் தனக்குச் சொந்தமான சுமார் 3 ஏக்கர் நிலத்தில் வீடு மற்றும் செல்லப் பிராணிகளோடு வசித்து வந்தார்.

ஒருமுறை மின்விசிறி வாங்க திரு.இஸ்மாயில் என்ற 30 வயது இளைஞரின் எலக்ட்ரிகல் கடைக்கு வந்த அவர் பிற்பாடு அவன் என் பிள்ளை என்று பலரிடமும் பகிரங்கமாக அறிவிக்கும் அளவிற்கு அவனுக்குத் தாயாகவே ஆகிப்போனார். தினமும் மாலை அவம் கடையில்தான் இருப்பார்! என்ன காரணம்? மொழி!!

Sunday, January 12, 2014

மொழி என்பது கருத்துப் பரிமாற்றத்துக்கான ஊடகம். மொழியை வைத்தே ஓர் இனம் அடையாளப்படுத்தப்படுகிறது.

நம் தமிழ் நாம் அறிவோம் பகுதி - 1
மொழி என்பது கருத்துப் பரிமாற்றத்துக்கான ஊடகம் ஆகும். மொழியை வைத்தே ஓர் இனம் அடையாளப்படுத்தப்படுகிறது.

ஒருவன் எத்துணை மொழிகள் தெரிந்து வைத்திருக்கிறானோ, அத்துணைப் பேருக்கு அவன் சமம் ஆவான் என்பது ஒரு முதுமொழி. கருத்துகளைத் தவறின்றி வெளிப்படுத்தவும், சரியாகப் பொருள் புரிந்துகொள்ளவும் மொழி பற்றிய அறிவும், உரைநடையில் சில நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டியதும் தேவையாய் இருக்கிறது.

Tuesday, June 18, 2013

காவிரி உப்பு



இனத்தின் பெயரால்

மொழியின் பெயரால்

மண்ணைப் பிரித்தவர்கள்

இறுதியில்

மேகம் கொட்டிச் செல்லும்

மழையையும்

கொள்ளையடித்தார்கள் !

***

வானுக்கும் பூமிக்கும்

கதவு போட முடியாததால்

காற்று மட்டும்

வேலி தாண்டி வந்து

வருடிச் செல்கிறது!

***

ஜாதி மத வெறுப்பின்

அடுப்புக்கு

விறகாகாமல்

பசித்த வயிறுகளுக்கெல்லாம்

அமுத மழை பொழிபவர்கள்

ஏர் பிடித்து வாழ்பவர்கள்!

Thursday, March 14, 2013

வெளி நாட்டு வாழ் தமிழ் குடும்பங்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

மொழி நம் வாழ்வின் ஒரு பகுதி மற்றும் உடலின் ஒரு உறுப்பு  போன்றது.குழந்தை வளர மொழியும்  தானே தாயோடு வளரும் அதனை தாய் பேசும்போது .நாம் பல மொழியை அறிவை நாடி கற்றுக் கொள்கின்றோம் . பிழைப்புக்காக நாடு விட்டு நாடு போகும் பொழுது அந்த நாட்டு மொழியை அறிந்துக் கொள்வதும் ,பேசுவதும் அவசியமாகின்றது . ஆனால் மொழி ஒரு கலாசாரத்தின் அடிப்படை அதனை நாம் ஒரு போதும் இழந்துவிடக் கூடாது . வெளிநாடு சென்று அந்த மொழியை மட்டும் நம் வீடுகளிலும் பேசி தாய் மொழியை பேசாமல் இருந்தால் தாய் மொழி மெல்ல சாகும் . அவ்வாறு பேச்சு வழக்கில் இல்லாததால் பல மொழிகள் (ஹீப்ரு,சமஸ்கிரதம்)அழிந்து போனது . ஹீப்ரு,சமஸ்கிரதம் மொழிகளை  இப்பொழுது மீண்டும் உயிர்ப்பிக்க முயல்கின்றனர் .அந்த நிலை தமிழ் மொழிக்கும் வராமல் பார்த்துக் கொள்வது நம் கடமை .
படத்தை பாருங்கள் .
"Tamil Ini" - Short Film - "தமிழ் இனி" குறும்படம் .இந்த படம் வெளி நாட்டு வாழ் தமிழ் குடும்பங்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

Wednesday, November 14, 2012

நான் ஒரு பெண்!


நான் ஒரு பெண்!

o நான் ஒரு பெண் என்பதால் இரண்டாம் பாலினத்தைச் சேர்ந்தவள்.

o நான் ஆண்களின் உலகில் பிறந்தேன். ஆண்களின் மொழியை கற்றுணர்ந்தேன். ஆண்களின் இல்லங்களில் வசிக்கிறேன். ஆண்களின் பள்ளிகளில் படித்து, ஆண்களின் அலுவலங்களில் பணிபுரிந்து, ஆண்கள் விதிக்கும் விதிகளைக் கடைபிடித்து வாழ்கிறேன்.

o திரும்பத் திரும்ப ஒரே பாடத்தைத்தான் சிறுவயதில் இருந்து கற்றுக்கொடுக்கிறார்கள். பிடிவாதம் பிடிக்காதே. விட்டுக்கொடு!

o என் இளைய சகோதரனும்கூட என் மீது அதிகாரம் செலுத்துவதை என்னால் தவிர்க்க இயலவில்லை.

o நான் அதிகம் தூங்கக்கூடாது. ருசியான உணவை நாடக்கூடாது. சத்தம் போட்டுப் பேசக்கூடாது.

o நான் வீட்டு வேலைகளை பழகிக்கொள்ளவேண்டும். என் சகோதரர்களுக்கு அந்த அவசியம் இல்லை.

o எனக்கு மட்டும் Good Touch, Bad Touch கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். என்னை அணுகுபவர்களிடம் நான் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

Monday, September 3, 2012

அது ஒரு நூல்


அது
ஒரு நூல்

அந்த
அற்புத நூல்
உன் கைகளில்

உனக்கும்
அந்த நூலுக்கும்
விட்டுப் பிரிவதியலாத்
தொடர்பு

ஆனால்
பரிதாப ஆச்சரியம்
யாதெனிலோ
அந்த நூல் பற்றி
ஏதும் தெரியாது
உனக்கு

வெறுமனே
அதை வாசித்தாலே
நன்மைகள் கோடி என்ற
பிழையான நினைப்புதான்
உனக்கு

நீ கற்றவன்
ஆனால் அந்த நூலை
நீ கற்றதில்லை