
நீயும் நானும்
செய்துகொண்டிருப்பதென்ன
சிந்தையுண்டா உனக்கு
கயிறிழுத்துப் பார்க்கிறோம்
வாழ்ந்த வாழ்க்கைக்கு
கேவலம் இல்லையா
முடிவுக்கு வா
*
பலசாலியல்ல....
வாழக் கிடத்ததை
வாழாதிருப்பவர்
பலசாலியல்ல....
வாழ்வை விட்டுவிட்டு
வறட்டுத் தனம் பற்றிக்கொண்டவர்
பலசாலியல்ல....
உறவை வெளியேற்றி
வெறுமையில் அமிழ்ந்தவர்
பலசாலியல்ல...
வளையத் தெரியாது
வம்படி நிற்பவர்