Thursday, June 9, 2022

Noor Saffiya 💞இறை சிந்தனை பிறந்தாய் தாத்தின் புகழ் சேர்க்க வந்த உஜுதே!

 Noor Saffiya

💞 இறை சிந்தனை

பிறந்தாய் தாத்தின்

புகழ் சேர்க்க வந்த உஜுதே!

சிந்தை கனிந்தேன் ;

நீ பிறந்ததும் மகிழ்வினிலே!

சீர் செய்யவே வந்தாய்!

நீ பிறந்ததும் மகிழ்வினிலே!

பந்தம் கூடியே நெகிழ்ந்தேன்!

நீ பிறந்ததும் மகிழ்வினிலே!

சொந்தமே ஆனந்தத்தோடு சூழ்ந்தாய்!

நீ பிறந்ததும் மகிழ்வினிலே!

அங்கம் வலி தெரியாதிருந்தேன்

நீ பிறந்ததும் மகிழ்வினிலே!


சங்கம் போல் சங்கமமாய்! ஆனது

நீ பிறந்த மகிழ்வினிலே!

தங்கம் பெற்ற அங்கமாய் ஜொலித்தேன்!

நீ பிறந்த மகிழ்வினிலே!

தரஜா உயர்த்தும் தருணம் இதுவோ!

நீ பிறந்ததும் மகிழ்வினிலே!

இங்கு பெற்ற உன் ரஹ்மத்தோடு

நீ இணைந்திருக்கும் மகிழ்வினிலே!

இங்கும் அங்குமே ஹுருலீன்களாவாய்!

நீ பிறந்த இந்நாளினிலே!

பங்கம் பறந்தோடியதே

நீ பிறந்த மகிழ்வினிலே!

எங்கும் எதிலும் வெற்றி காண்பாய்!

நி பிறந்த இப்புனித நாளதினிலே!

மங்கல நிகழ்வு மட்டுமே சூழுந்திடும்!

நீ பிறந்த இப் புனித மகிழ்வினிலே!

மங்கா ஜோதி ப்ரகாசம் முழங்குமே!

அங்கம் மனைவியில்  மின்னுமே!

இப்புனித மகிழ்வினிலே!

தங்க நகை அள்ளி வருமே

திங்கள் ஹபீப் பரக்கத்தாலே!

புன்னகையோடு புவியினிலே;

பொன்னகை குவியலாகும்!

நீ பிறந்த இப்புனித நாளதினிலே!

வகை வகையான உள்ரங்கம்

விதவிதமான ஞான சுரங்கம்!

விதைக்கும் உன் தவ கோலம்!

விருவிருவென உயர்த்திடும்!

இப்புனித நன்நாளதினிலே!

வந்ததின் நோக்கம் அறிந்தாய்!

விந்தின் இயக்கம் அல்லாஹ்!என,

பந்து போல் சுழலும் ப்ரபஞ்சம்

பந்தமாய் உன்னுள் மிஞ்சும்!

இப்புனித நன்நாளினிலே!

பிறப்பும் ஓர் அற்புதம் என்றே;

இறப்பும் ஓர் சிற்பத்தின் நிலை!

சுரக்கும் ஓர் பற்பல ஞான கலை!

சிறக்கும் ஓர் சீர் செய்யும் நிலை

இப்புனித நன்நாளிதனிலே!

பதினாறு செல்வங்கள் எதுவென

பதிக்கும் நிலைக்கும் புதுமண

பந்தங்கள் ஹூருலீன்களாய்!

சந்தங்களாய் கூறும் திக்ர்,சலவாத்!

இப்புனித நன்நாளிதனிலே!

சங்கமமே என சாட்சியாய் நின்றே!

சங்கமமாகும் மலக்கு அர்ஷினிலே!

வலம் வந்து கேட்கும் சக்தியே!

நிலம் வந்த நீங்கள் பக்தியினிலே!

இப்புனித நன்நாளதினிலே!

படைப்பின் புனிதம் கண்டுகொண்டே!

படைப்புகளின் துஆ களிப்புடனே!

படைப்புகளுக்கு அள்ளி வழங்குவாய்!

படை கண்ட,புடை சூழும் ஸஹாபாக்கள் ப்ரியமாய்!

இப்புனித நன்நாளதினிலே!

தூதரின் நிறை ஆசியோடும்!

துங்கம் நிறை பெற்றேகுவதோடும்!

தூய நன்மக்கள் சேர்க்கையோடும்!

துய்யோன் அருள்மழை பொழிவதோடும்!

இப்புனித நன்நாளதினிலே!

அமானிதமாய் ஆள்வாய் வாழ்வாய்!

ஆமீன் எனும் அர்ஷிீன் வாழ்த்து!

அன்பின் அகாதிரியா. பொழிவான்!

பண்பின் அஹ்மதரே ஆசியினிலே!

இப்புனித நன்நாளதினிலே!

       அஹ்மதரின் ஸலவாத்

            துதித்து நாவினில்

                  நனைவோம்!

                     آمــين.آَمِيـٍـِنْ آَمِيـٍـِنْ  

                     يَآ رَبَّ آلٌعَآ لَمِِيِنْ  !🌹

                    يارحمة اللعالمين !🌹

                     🤲🤲🤲🤲🤲

                   💞 يامُحَمَّدٍ 💞

   🖋நூர்ஷஃபியா காதிரியா



 

No comments: