Tuesday, May 25, 2021

கண்ணாடி🪞!

 

Noor Saffiya


💞 இறைசிந்தனை

        கண்ணாடி🪞!

மண்ணறை நெருக்கம்

மண் மீது செய்யும்

செயலினிலிருந்தே!

மண் மீது போடும்

ஆட்டம் 💃 எப்படி!

மாநபி பாதையின் வழியிலினிலா?

மண் மீது கொள்ளும்

பேரசையிலிருந்தா?

மண்ணாசைக்காக

ஆதிக்கம் செய்தோமா?

பொன்னாசைக்காக

அழித்து செய்தோமா?

பதவி ஆசைக்காக

நோகடித்து செய்தோமா?

ஆடம்பர  வாழ்க்கைக்காக!

அழிவின் உச்சத்தினிலேயே!

அழிந்து ஹராமில்

அலங்கரித்தோமா?

நான் எனும் ஆணவம்

அகங்காரத்தினிலே!

நாவும்,அங்கமும்

அதிகார தோரணையினிலே!

நாவினில் ஓங்கார

ஆழிவில் மிதந்தோமா!

நீயே ஒர் கண்ணாடி!

நிழலாய் தெரியும் பார்!

நிஜம் பேசும் முன்னாடி!

நாயன் தெரியும் பார்!

நீயே நீதிமான்! நீயும்,

ஓர் அகக்கண்ணாடி!

நாயனின் பார்வையில்

நடந்தது வரும் முன்னாடி!

நீதமான தராசை பார்!

நாதராய் தெரியும் அறி!

அறியும்வரை செய்திடு!

அஜாயிபுல் இஸ்திஃபார்!

அரபியில் தெரியா மனமே!

அகத்தூய்மையுடனேன்

மன்னிப்பாய் ரப்பே!

மரணத்திற்கு முன்னே!

மனமுருகி கேட்கும்

மன்னானே! இந்நிமிடமே!

அழுதிடு மனதார அழுதிடு!

அழுதால் கண்ணீர்

வரலையா!

அல்லாஹ் அது உன்னின்

அதுவும் ஓர் தண்டனை!

அதை நினைத்து அழு!

ஆழ்ந்து இறையில்

அகம் நுழையும்வரை அழு!

அன்பானவன் ஏற்பாய்!

அரவணைபவனே!

அவனின்றி வேறு கதி

இல்லை;இல்லையே!

அவனில் அர்ப்பணம்!

அவன் நம்மின்

சமர்ப்பணமே!

நிச்சயம் அவனே!

செவிசாய்ப்பவன்!

நிம்மதியாய் ஆள்,

வாழ வகுப்பவன்!

ஒவ்வொரு மனமும்

உன்னதமானாலே!

கொரோனாவும் வராது!

கொடிய எந்த ஆபத்தும்

கொடுப்பதில்லை!

கொடுப்பவனும் அவனே!

எடுப்பவனும் அவனே!

நம்மின் பாவக்கரை

நாயன் நீக்கியே அல்லாது!

நாதர் இஷ்கினாலே!

நாயன் நம்மையும்!

நம் சந்ததிகள்,பெற்றொர்!

நம் உடன்பிறப்புகள்!

நம் உற்ற ப்ரியர்கள்!

நீதன் தேர்ந்தெடுக்கப்பட்ட!

நல் உம்மத்தாய் மஹ்ஷர்

நாளதினிலே முகம்

நூரான நேச உம்மத்தாய்!

நாதர் அழைக்கும் சீரிய

நல் வரமாய் ஆக்குவானாக!

       .  அழகிய ஹக் திக்ரும்

        அஹ்மதரின் ஸலவாத்

            துதித்து நாவினில்

                 நனைவோம்.!

                       ஆமீன் !!

                    யா  ரப்பே  !!

               என்  ஹுப்பே  !!

              ஸல்லல்லாஹு

             அலா முஹம்மத்

              ஸல்லல்லாஹ்

        அலைஹிவ ஸல்லம்💞

🖋நூர்ஷஃபியா காதிரியா

No comments: