Friday, August 23, 2019

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.
81:1. சூரியன் சுருட்டப்படும் போது,
81:2. நட்சத்திரங்கள் உதிரும் போது,
81:3. மலைகள் பெயர்க்கப்படும் போது,
81:4. கருவுற்ற ஒட்டகங்கள் கவனிப்பாரற்று விடப்படும் போது,
81:5. விலங்குகள் ஒன்று திரட்டப்படும் போது,
81:6. கடல்கள் தீ மூட்டப்படும் போது,
81:7. உயிர்கள் மீண்டும் (உடல்களுடன்) சேர்க்கப்படும் போது,
81:8, 9. என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது,
81:10. ஏடுகள் விரிக்கப்படும் போது,
81:11. வானம் அகற்றப்படும் போது,
81:12. நரகம் கொளுத்தப்படும் போது,

81:13. சொர்க்கம் அருகே கொண்டு வரப்படும் போது,
81:14. ஒருவன், தான் முற்படுத்தியதை அறிந்து கொள்வான்.
81:15, 16. மறைந்தும் மறையாமலிருக்கிற, (முழுதும்) மறையக் கூடிய நட்சத்திரங்கள் மீது சத்தியம் செய்கிறேன்.
81:17. பின்னோக்கிச் செல்லும் இரவின் மீது சத்தியமாக!
81:18. தெளிவாகும் காலைப் பொழுதின் மீது சத்தியமாக!
81:19. இது மரியாதைக்குரிய தூதரின் (ஜிப்ரீலின்) சொல்லாகும்.
81:20. (அவர்) வலிமை மிக்கவர்; அர்ஷுக்கு உரியவனிடத்தில் தகுதி பெற்றவர்.
81:21. வானவர்களின் தலைவர்; அங்கே நம்பிக்கைக்குரியவர்.
81:22. உங்கள் தோழர் (முஹம்மது) பைத்தியக்காரர் அல்லர்.
81:23. அவரை (ஜிப்ரீலை) தெளிவான அடிவானத்தில் பார்த்தார்.
81:24. அவர் (முஹம்மது) மறைவான வற்றில் கஞ்சத்தனம் செய்பவரல்லர்.
81:25. இது விரட்டப்பட்ட ஷைத்தானின் கூற்று அல்ல.
81:26. எங்கே செல்கிறீர்கள்?
81:27, 28. இது அகிலத்தாருக்கும், உங்களில் யார் நேராக நடக்க விரும்புகிறாரோ அவருக்கும் அறிவுரை தவிர வேறு இல்லை.
81:29. அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் நாடுவதைத் தவிர நீங்கள் நாடுவதில்லை.
குர்ஆன் Quran

No comments: