Tuesday, October 28, 2014

புரியாமையையும் புரிதலும் - தாஜ் தீன்

புரியாததுகள்..
நம்மில் திறக்கப்படாத கதவுகள்!
அது புரிப்படாததினால்
கதவுகள் திறக்கப்படாமலேயேதான்
நாளும் வாழ்கிறோம்!.

புரியாமையின்
கொடுமையின்றி
ஓர் மகத்தான கவிதையும் கூட
நமக்கு பிடிப்படாமல் போவது
வேறெங்கணம்!?

புரியாமையை வென்ற
புரிதலிலேயே
நவ கலைகளின்
அத்தனை நேர்த்தியும்
நம்மை அசுவாசப்படுத்தும்
என்பது நிச்சயம்.
 
 
ஆக்கம் தாஜ் தீன்Taj Deen

No comments: